Friday, May 25, 2007

அழகின் ஜனனம்!!




ண்த்துப் பூச்சி பறக்குது! பார்!!
அழகான செட்டை அடிக்குது! பார்!!
பூக்கள் மேலே பறந்து போய் தேனைக்குடித்துப் பறக்குது பார்!!


இந்தப் பாட்டை சிறுவர்களாகப் படித்துமிருப்பீர்கள். இப்பூச்சியைப் பார்த்தும் ரசித்திருப்பீர்கள்!

பூப்பூவா பறந்து போகும் பட்டாம்பூச்சியக்கா! நீ
பள பளனு போட்டிருப்பது யாரு? கொடுத்த சொக்கா?


இந்தத் திரையிசைப் பாடலும் கேட்டிருப்பீர்கள்.

இந்த அழகின் ஜனனத்துள் ;இவ்வளவு நுட்பம் இருந்ததை என் இளமையறியவில்லை.


அந்த அறியாக்காலத்தில் "மயிர் கொட்டிப் புழுவுக்கு" மண்ணெய் தெளித்துக் கொழுத்தியுள்ளேன்.

இப்போ எவ்வளவு "அழகை" அழித்துள்ளேன். ஊர்பூரா "பூவரசில்" தொங்கும் இதை அழித்தார்கள்!!

என்பது வருத்தமாகத் தான் இருக்கிறது.

இந்த நகர் மயமான வாழ்வில்; எப்போதாவது ஒரு நாள் அழையா விருந்தாளியாக என் பலகணிப் பூவை நாடிவரும் பட்டாம் பூச்சியை ஆசையுடன் ; அசையாது பார்த்து ரசித்து; மனதுள் மன்னிப்பும் கேட்பேன்.

இவை மனிதனுக்குச் செய்யும் சேவை!!;மரங்களை விருத்திசெய்யும் மகரந்தச் சேர்க்கை அளப்பெரியது. மகத்தானது..மனிதனால் முடியாதது.

இந்த அழகின் ஜனனத்தைப் பார்த்த போது உங்களுடன் பகிர வேண்டும் போல் இருந்தது.


Wednesday, May 16, 2007

வெறி பிடித்த மிருகங்கள்!!

மதுவின் வெறியால்; அது கொடுக்கும் மயக்கத்துக்கு அடிமையாகி...தன் நிலை இழந்த மனிதர்கள் பலரைப்
பார்த்துச் சிரித்தோ! பரிதாபப் பட்டோ இருப்பீர்கள்.
அதன் தன்நிலை மறக்கச் செய்யும் தன்மையை உணர்ந்தும் பலர் அதை அருந்துகிறார்கள்.
அவலப்படுகிறார்கள்.

இதோ இந்த வெறி பிடித்த மிருகங்களைப் பாருங்கள்.