Tuesday, July 31, 2007

திருநங்கையாக பிரஞ்சுத் திரையில் வாழ்ந்து காட்டிய MICHEL SERRAULT

பிரஞ்சுத் திரைப்பட உலகில் 50 வருடங்களாக தன் திறம்பட்ட
நடிப்பால் ,குறிப்பாக நகைச்சுவையால் கோலோச்சிய சிறந்த குணசித்திர நடிகர் மிசல் செறோ (MICHEL SERRAULT) தன் 79 வயதில் நோய்வாய்ப்பட்டு 29-07-2007 மாலை காலமானார்.

பிரான்சில் புறுனொய் (BRUNOY) ல் 24-01-1928 ல் பிறந்து, 1954 ல் திரையுலகுக்கு வந்து பல தரப்பட்ட பாத்திரங்களை ஏற்று நடித்தபோதும். அவருக்கு ( CAGE AUX FOLLES) காச் ஓ பொலி என்ற படத்தில் ஏற்று நடித்த திருநங்கை பாத்திரமே மிகப் பெரிய புகழைத் தேடித் தந்ததுடன், சர்வதேச கீர்த்தியையும் ஏற்படுத்தியது மாத்திரமன்றி தொடர்ந்து 3 பாகமாக வெளிவந்து வெற்றி கண்டது.


நான் மிக மிக இரசித்த இவர் படமும் இந்த CAGE AUX FOLLES.



இவர் சிறந்த நடிப்பால், திருநங்கைகளே வெகுவாகப் பாராட்டியதாக கூறுவார்கள். அவ்வளவு இயல்பான மிக அவதானிப்பான நடிப்பு.



இவர் பிரான்சின் உயர் திரைப்பட விருதான சிசர்(CESAR) , 3 தடவைகள் பெற்றுள்ளார். மொத்தம் 135 முழுப்படங்கள், தொலைக்காட்சிப் படங்கள், மேடை நாடகமென ,சென்ற வருடம் வரை நடித்துக் கொண்டே இருந்தார்.
ஒப்பாரும் மிக்காரும் அற்றவர். பிரான்சின் திரையுலகுக்கு மிகப் பெரிய இழப்பே!


இன்று தொலைக்காட்சிச் செய்தியில் கூட அவர் திருநங்கை வேசத்தின் சில காட்சியைக் காட்டி... செய்தி வாசிப்பவர் ,இந்தக் கவலையான சூழலிலும் தன்னை மறந்து சிரிக்கும் படியானது.
உங்களில் யாருக்காவது இந்தத் திரைப்படம் கிடைத்தால் பார்க்கவும்.



Monday, July 30, 2007

அதி புத்திசாலித்தனம்....

கல உயிரினங்களும், உயிர் வாழ உரிய வித்தைகளைக் கற்றவையாக இயற்கையிலே அமையப் பெற்றன.


சிம்பன்சிக் குரங்னினம் மிகுந்த புத்திசாலித் தனமான விலங்காகக் கணிக்கப்பட்டு; மனிதனுக்கு மிகக் கிட்டிய உறவும்;புத்திசாலித் தனமும் உள்ளதாக ஆய்வாளர்கள்; கூறுகிறார்கள்.

எனினும் சிலவற்றின் அதீத நவீன உலகுக்கேற்ற வாழ்வியல் மாற்றப் புத்திசாலித் தனம் ஆச்சரியமானது.

சென்ற வாரம் ஜப்பானியக் காகங்கள் பற்றிய ஆய்வு சம்பந்தமான விலங்கியல் விவரணச்சித்திரம் ;பார்த்த போது.... காகத்துக்கு, புறாவை விட மூளை ;3 மடங்கு பெரியது என விளக்கி ;அதன் புத்திசாலித் தனம் பற்றியும்; இந்த நவீன உலகின் மக்களுடன் அது எப்படி ? தன் வாழ்க்கையை அனுசரித்துச் செல்கிறதென்பதனை விளக்கிய போது...

காகம் பற்றிய தேடுதல் செய்த போது...YOUTUBEல் இவற்றைக் கண்டேன்..
நீங்களும் பாருங்கள்....




Monday, July 23, 2007

இந்த இரண்டு துயரமும் கூறுவது ஒன்றே!!!


25-07-2007 யூனியர் விகடன் படித்தவர்கள் ....

1-நாவினால் சுட்டவனை தீயினால் சுட்டானா?...

2- ஐந்து ரூபாய்க்காக ஒரு தற்கொலை....


என்ற இந்தச் செய்திகளைப் படித்திருக்கலாம்!

இச் செய்தியின் நாயகன், நாயகிக்கு வயது, வெறும் பத்தும், பதினொன்றுமே.....

செய்தியைத் சுருக்கமாகத் தருகிறேன்!


முதலாவது செய்தியின் சிறுவன் 10 வயது, அவன் வயதையொத்த சிறுவன் ,இவன் தாயாரை கெட்டவார்த்தையால் திட்டி விட்டான் என்பதால், அவன் வீடுசென்று மண்ணெய் ஊற்றிக் கொழுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளான். எரிந்த சிறுவனே வாக்குமூலம் கொடுத்துள்ளான்।


இரண்டாவது செய்தியில் 11 வயதுச் சிறுமியின் தந்தை அவளுக்குப் 10 ரூபா கொடுக்கிறார், அவள் அக்கா அதில் 5 ரூபா தனக்கு எனக்கேட்க ,தாய் 5 ரூபாயை வாங்கிக் கொடுத்துவிட்டு வேலைக்குச் செல்கிறார்!, தன் காசைச் சகோதரிக்குக் கொடுத்தது தாங்காது, துப்பட்டாவைக் கழுத்தில் மாட்டி சுருக்கிட்டு, தொங்கி இறந்தே விட்டாள்।


இந்த இளம் குருத்துக்களின் மனதில் இவ்வளவு வைராக்கியமும், வன்மமும்
எப்படி? வந்தது...


இதற்கு பெரிய ஆய்வு செய்ய வேண்டியதில்லை.


இன்றைய திரைப்படங்களே....இந்தச் சீரழிவின் ஜீவநாடி....

இன்றைய பழிக்குப்பழி தீர்க்கும் கதையமைப்புடைய திரைப்படங்கள்,
எம் சிறார்களை மனநிலையை வெகுவாகப் பாதித்து விட்டது.


அன்றைய படங்களின் நாயகன் குற்றம் செய்தவரைப் பிடித்து,
பொலிசாரின் கைகளில் கொடுப்பது போல் காட்சியமைக்கப்பட்டது.
ஆனால் இன்று அண்ணாசாலையில் வைத்துச் சுட்டுத் தள்ளுவது
போல காட்சியமைத்து,சட்டத்தைக் கையில் எடு!எனச் சொல்லிக் கொடுக்கப்படுகிறது!।


இந்த வெளுத்தையெல்லாம் பாலேன எண்ணும் சிறுவர்கள் மனதில் விசத்தைத் தெளித்துவிட்டார்கள்,,,,

வயது வந்தவர்களே திரைப்பட நாயகன்களைக் கடவுளாகக் கருதிப் பாலாபிஷேகம் செய்யும் போது ,இந்த விபரமறியாப் பிஞ்சுகளின் நிலையென்ன?

கல்லாப்பெட்டி நிரப்பும் கூட்டம் ,சமுதாயம் பற்றிச் சிந்திக்காது.
நாம் சிந்திக்க வேண்டிய காலம் வந்து விட்டது!


அடுத்து திரைப்படத்தின் தங்கை சின்னத்திரைக் கதைகளில்
சிறிய குடும்பச்சிக்கல்கலுக்குக் கூட நாயகி தற்கொலை என்பதை
விலாவாரியாகக் காட்டுகிறார்கள் இந்த தொலைக்காட்சியே
தஞ்சமெனக் கிடக்கும் தாய்மாருடன் இந்தச் சிறுமிகளும்
சேர்ந்து இவற்றைப் பார்த்து, மனமாசடைந்தவர்களாகி ,
சிறு மனச் சோர்வுக்குக் கூட இவற்றை நாடுவது,
சிந்தனைக்குரியது.


10 வயதில் கொலைசெய்யத் துணிவு வருவதும், தற்கொலை செய்யும் மனத்திடம் வருவதும்... வரவேற்கக் கூடியதல்ல.

நாம் நமது எதிர்கால சந்ததி பற்றிச் சிந்திக்க வேண்டிய காலம் வந்து விட்டதென்பதன் அறிகுறியே இது.....

இவர்கள் இளம் மனதில் இனியாவது... பொறுமை, தர்மம்,ஞாயம்,
மன்னிக்கும் மனப்பாங்கு, பழிவாங்கும் எண்ணமின்மை போன்ற சமூகப் பண்புகளை வளர்ப்போமா??

அத்துடன் திரைப்படம், தொலைக் காட்சி என்பது தவிர்த்து...வாசித்தல், கேட்டல் என்ற விடயங்களையும் நாமும் அவர்களுடன் சேர்ந்து செய்யப் பழகுவோமா??

பாடசாலைகளிலும்...

உயிரின் பெறுமதியை உணரப் போதித்தல்

பழிக்குப்பழியால் ஏற்படும் துன்பம் அவமானம் போன்றவற்றை விளக்குதல்।

தற்கொலையால் குடும்ப அங்கத்தினர் படும் வாழ்நாள் வேதனையைப் புரிய வைத்தல்।

குடும்பத்திலுள்ள அனைவருமே ,சிறியோர் மனதைப்பாதிக்கக் கூடிய தொலைக்காட்சித் தொடர்களை முற்றாகப் பார்ப்பதைத் தவிர்த்து,
நம் சிறார்களைக் காத்து, நல்ல எதிர்காலச் சந்ததியை உருவாக்குவோமா
?

Wednesday, July 18, 2007

புகைப்படப் போட்டி!!!!

'' புகைப்படப் போட்டி'' அறிவித்தலில்...வந்த பலர் அனுப்பிய படங்களைப் பார்த்த போது , பரிசு கிடைக்காதென்பது தெளிவாகத் தெரிந்த போதும், பதிவு போட்டும் அதிக நாளாவதால் ,இதையிடுகிறேன்।

இந்தக் கலையெல்லாம் ,நமக்கு எதுவும் புரிவதில்லை। ஏதோ தன்னியக்க கருவிகள் வந்தபின் நாமும் ஏதோ பிடிக்கிறோம்।

அவ்வளவுதான்.....




அட....தமிழ்மணத்தில்.....புகைப்படக் கலைப் போட்டியாமே!!!!!!








தேனுண்ணும் வண்டு.........