Friday, September 28, 2007

Mr.Dominique Strauss-Kahn -உலக நிதி நிறுவனத் தலைவர்



பிரான்சின் அரசியலில் மிக முக்கியமான
திரு.Dominique Strauss-Kahn (58), அவர்கள் உலக நிதி நிறுவனத்
(International Monetary Fund) தலைவராகத் தெரிவாகியுள்ளார்.

இவர் சிறந்த கல்விமான் அத்துடன் சோசலிசக் கட்சியின் மிக முக்கிய பிரமுகர்.

நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டிருக்க வேண்டியவர்.
போட்டியிட்டிருந்தால் வென்றிருப்பார், எனும் அபிப்பிராயமும் இருந்தது.

இவர் ஏழை நாடுகள் மேல் அதிகம் கவனம் செலுத்த உள்ளதாகக் கூறியுள்ளார்.
வரும் நவம்பர் முதலாம் திகதி பதவி ஏற்று, 5 வருடங்கள் இந்தப் பதவியில் இருப்பார்.
சொன்னதைச் செய்வார் என எதிர்பார்த்து வரவேற்போம்.

Thursday, September 06, 2007

மேற்கத்தைய பாரம்பரிய இசையுலக மேதைLUCIANO PAVAROTTI மறைந்தார்.



மேற்கத்தைய பாரம்பரிய(OPERA) இசையுலகின் மன்னனாக 40 வருடங்கள் ரசிகர் மனதைக் கவர்ந்த லூசியனொ பவறொற்ரி (Luviano PAVAROTTI) இன்று அதிகாலை இறையெய்தினார்.

இவர் இத்தாலியப் பிறப்பிடமாகக் கொண்டு; தன் குரலால் உலக மேற்கத்தைய பாரம்பரிய இசை ரசிகர்களைக் கவர்ந்தவர்.

1990 உலகக் கோப்பை உதைபந்தாட்டப் போட்டியின் முன்; ஏனைய திறமைமிக்க மேதைகளான
Placido DOMININGO,Jose CARERRAS; உடன் Zubin MEHTA(இந்தியர்) சுபேன் மேத்தா வின் நெறியாள்கையில் பாடியதை ,உலகமே கட்டு கேட்டு ரசித்தது.

2006 இல் இருந்து புற்று நோயால் பாதிக்கப்பட்டதால்; பாடுவதை நிறுத்தியிருந்தார்.

என் ஆரம்ப காலப் பாரிஸ் வாழ்வில் இவர் என் தனிமையில் துணையாக இருந்தவர்.


ஆச்சரியப்படவேண்டாம்....

1984 ல் , பாரிஸ் வந்த போது; இங்கு சில குறிப்பிட்ட தொலைக்காட்டிகளே இருந்த காலம்; நமது பாடல்கள் கேட்கக் கிடைக்காத காலம்.வீட்டு நினைவுகளால் நித்திரை தொலைத்த காலம்..தொலைக்காட்சியிலோ நள்ளிரவின் பின் பாரம்பரிய இசையே போடுவார்கள்..;ஏதோ பார்ப்போம் என பார்த்த போது மெள்ள மெள்ள இதில் சிறு ரசிப்புத் தன்மை ஏற்பட்டது.

குறிப்பாக இவர் மேடையில் எப்போதுமே சிரித்த முகத்துடனே பாடுவார்.நேரடிக் கச்சேரிகளில் ஒவ்வொரு பாடல் முடிவிலும் ரசிகர்களின் கைதட்டலை ஏற்றுக் கைகூப்பிக் கும்பிடுவார்.
அந்தச் சிரித்தமுகம் என் தனிமைக்கு இனிமையாக இருந்தது
.

இவர், நம் செம்மங்குடி சீனிவாச ஐயர், ஜேசுதாஸ்; ஷேசு கோபாலன்; சீர்காழியுடன் ஒப்பிடக் கூடியவர்.
திறமை மிக்க ஒரு மேதையை இசையுலகம் இழந்து விட்டது.

Monday, September 03, 2007

பாரிஸ் விநாயகர் தேரில்...

பாரிசில் சென்ற ஞாயிறு 02-09-2007 அன்று , மாணிக்க விநாயகர் தேரில் பவனி வந்தார்.
உங்களுக்காகச் சில படங்கள்...

பஞ்சமுக விநாயகர் தேரில்.....





பாரிஸ் வீதியில் தேர்....




நாதஸ்வர மேளம் முழங்க...


உடன் துப்பரவுப் பணி...







நிறைகுட வரவேற்பு...



சிதறக் காத்திருக்கும்...

சிதறிய.....


மாவிலை,கரும்பு, தோரணம்..


சேலையிலும் தோரணம்..
முருகன் தேர்


காணொளிக் காட்சியாக சில பகுதிகள்....







வழமையை விட இந்த வருடம், மக்கள் குறைவாக வருகை தந்த போதும், திருவிழா பெருவிழாவாக நிறைவெய்தியது.