tag:blogger.com,1999:blog-32397987.post6813900526340423118..comments2024-01-22T02:01:17.225+01:00Comments on என் பார்வையில்..Johan-Paris: அம்மாடி....இந்தப் பொண்ணுக்கு இம்புட்டுப் பெரிசு....யோகன் பாரிஸ்(Johan-Paris)http://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-32397987.post-86283307311644540572008-03-11T13:01:00.000+01:002008-03-11T13:01:00.000+01:00ரிஷான்!புரிகிறது.நீங்கள் நாடுதிரும்பும் போது கேட்ட...ரிஷான்!<BR/>புரிகிறது.நீங்கள் நாடுதிரும்பும் போது கேட்டு அறிந்து எழுதுங்கள்.<BR/>நான் மலையகத்தில் கடமைபுரிந்த போது; பிக்குனிகளைக் கண்டபோதும் அவர்கள் பற்றி அறியவில்லை.<BR/>நீங்கள் பிறந்து வளர்ந்ததால்;அத்துடன் மொழி அத்துப்படி ஆனதால்; அறிய வாய்ப்பாகியுள்ளது.<BR/>மிக வித்தியாசமான யாழ் தமிழ்மக்களைச் சந்தித்துள்ளீர்கள். பொதுவாக சிங்களப் பிரதேசங்களில்<BR/>யாழ்பாணத் தமிழர் "காரியகாரர்;சுயநலமிகள்" எனும் பொதுவான கருத்துண்டு.<BR/>அவர்கள் வாழ்வமைப்பில் உள்ள சில நியதிகள் ,பலரை அப்படி வாழவைக்கிற தென்பதே உண்மை.<BR/>மற்றும் படி சகல இனத்திலும் உள்ள குறை நிறைகள் எமக்கு உண்டு.<BR/>யாழ்பாண விடயங்கள் பற்றி ...மிக அழகாகத்; தம்பி" கானாப் பிரபா" .;அவர் மடத்துவாசல் பிள்ளையார் கோவிலடி தளத்தில் எழுதுகிறார்; அத்துடன் மலைநாடர்-குறிஞ்சி நிலம்" கூட நல்ல பதிவுகள் போட்டுள்ளார். சின்னக்குட்டியரின் "ஊர் உளவாரம்" சில பதிவுகள் தந்துள்ளது.<BR/>நேரமும் சுவையான தலைப்பும் கிடைத்தால் எழுதலாம்.<BR/>கட்டாரில் தனிமை போல் உள்ளது; எங்களுக்குக் கூட இத்தனை வருட மானாலும் ;நாடு பற்றிய ஆசை<BR/>தீரவில்லை.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-56454788324394742172008-03-10T18:06:00.000+01:002008-03-10T18:06:00.000+01:00This is called digression! The point here is if Pe...This is called digression! The point here is if Periyar called others as சோம்பேறி, can others can call him சோம்பேறி for the same reason (long beard)!<BR/><BR/>Your தார்மீக வெறி is simply out of place and just makes it clear you have no further arguments! :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-57250204469711616912008-03-10T12:37:00.000+01:002008-03-10T12:37:00.000+01:00//If he can call others as சோம்பேறி, he will be ca...//If he can call others as சோம்பேறி, he will be called the same by others too :-)//<BR/><BR/>நண்பரே!<BR/>இப்படிப்பட்ட ஒரு தார்மீக வெறி; சங்கராச்சாரியார் "வேலைக்குச் செல்லும் பெண்கள் நடத்தை கெட்டவர்கள்" என்று சொல்லும் போது யாருக்குமே வந்ததாகத் தெரியவில்லை.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-44001560187274765762008-03-09T04:38:00.000+01:002008-03-09T04:38:00.000+01:00இந்த செய்திக்கு 34 நீண்ண்ண்ண்ட மறு மொழிகள் - விவாத...இந்த செய்திக்கு 34 நீண்ண்ண்ண்ட மறு மொழிகள் - விவாதங்கள் - விளக்கங்கள் - ம்ம்ம் - தெரிந்து கொள்ள வேண்டியது இன்னும் இருக்கிறது என நினைக்கிறேன். எத்தனை செய்திகள் - ஆராய்ச்சிகள் - உவமைகள் - அனுபவங்கள் - ம்ம்ம்ம் <BR/><BR/>வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-79907263171210301212008-03-08T18:47:00.000+01:002008-03-08T18:47:00.000+01:00////மனம் நலம் படித்தவர்களுக்குக் கூட மன நலம் பிரள்...////மனம் நலம் படித்தவர்களுக்குக் கூட மன நலம் பிரள்வது உண்டு. அப்போ மருத்துவரிடம் போயே ஆக வேண்டும். ///<BR/><BR/>ஆமாம் ஏற்றுக் கொள்ளக் கூடியவாதம் தான். ஆனால் இந்த படத்தில் இருக்கும் பெண்ணை பற்றி என் சிந்தனையில் ஒருவித மிருகமாக தெரிந்தது. ராகவனுக்கு விட்டலாச்சாரியா படத்துல வர்ர வெள்ளைப் பேய் மாதிரி இருக்கு. அது போல் மாறுபட்ட கண்ணோட்டத்துடன் கருத்து சொன்னவர்கள் எல்லாம் மனநல மருத்துவரிடம் போக வேண்டுமா? <BR/><BR/>///ஆனால் இந்தப் பெண் இப்படியே தலைவிரி கோலமாகவா??வேலைக்கு<BR/>வரப்போகிறார்.<BR/>இல்லை, நீங்களே பார்த்தீர்களே அந்தப் பெண்னின் தலையில் இவ்வளவு பெரிய முடி என்பது தெரிந்ததா?? ////<BR/><BR/>உங்களுக்கு நேர்த்தியா தெரிவது எங்களுக்கு தெரியலையே?<BR/><BR/>////சுதந்திரம்,சமத்துவம்,சகோதரத்துவம் என்னும் பிரான்சிலும் தனிச் சட்ட திட்டம் உண்டு.////<BR/><BR/>அந்த சுதந்திரத்திற்குள் தான் உடை கட்டுப்பாடும் உண்டு என்கின்றேன். சமூகம் எதையும் சுதந்திரத்துடன் அனுமதிப்பதில்லை. உன் வீட்டில் இருக்கும் போது இருக்கும் முழு சுதந்திரம் பொதுவிற்குள் கூடாது என்கிறது. <BR/><BR/>///நீங்கள் கூறும் கழுத்துவலி, தலைவலி பற்றி என்னால் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவ்வளவு பாரமாக இருக்குமா?? ஆனால் ஓரளவுவயதில் இருந்தே பழக்கப்பட்டிருப்பதால், இதற்குச் சாத்தியமில்லை என நினைக்கிறேன்./////<BR/><BR/><BR/>கழுத்துவலி, தலைவலி பற்றி என்னால் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. எதுவும் நாள்பட நாள்பட உடம்பு பழகி விடும் என்ற வாதம் ஏற்புக்குடையதல்ல. உதாரணமாக நம்முடைய சிந்தனையில் தோன்றும் எண்ணங்கள் கூட நாட்பட நாள்பட முகத்தில் வோகங்களின் கோடுகளை சுருக்கங்ககளாக போட்டு விடும் தன்மை உடையவை. அல்சர் உருவாவவது கூட அப்படித்தான். உங்களுக்கு தெரியும் என்று நினைக்கின்றேன். உடல்நிலைக்கு ஏற்காத பாதிப்பு தருகின்ற எண்ணங்களே மாறுவலி, அல்சர் தோல் சுருக்கங்களை உற்பத்தி செய்யும் போது இந்த முடியை யோசித்துப் பாருங்கள். <BR/><BR/>//// மலை ஏறுவார்கள்,அக்கூடைப் பட்டி தலையில் இருந்தே தொங்கும், அவர்கள் கழுத்து நோ, தலைவலி என<BR/>அவதிப்பட்டதில்லை.அவர்களுடன் பேசக்கிடைத்தபோது கேட்டேன்.பழகிப் போய்விட்டது ////<BR/><BR/>இந்த வாதங்களையும் நான் மறுக்கின்றேன் தோழர். உடல் இருந்தால் வலி இருக்கும் நோய் இருக்கும் முதுமை இருக்கும். ஏழ்மை மிகக் கொடியது. இங்கு வீடு கட்டுவதறகு 4 ஆட்கள் போதும். நம் நாட்டில் அடிக்கும் வெயிலில் துலையில் செங்கற்களையும் மற்றும் பல வித பாரங்களையும் சுமந்து செல்கிறார்கள். மாலையில் உடல்வலி மதாங்காமல் சாராயம் ஊற்றிக் கொள்கிறார்கள். மறுநாள் அதே உழைப்பு நாய் பொழப்பு என்பார்கள். மனிதனை மனிதன் வண்டியில் வைத்து இழுத்துப் போவது எல்லாமே சுகம் கொடுக்கும் வேலையல்ல. அடுத்த வேலை சோற்றுக்காக அவன் போராடியே தீர வேண்டும். அவனைப் போய் இந்த வேலை செய்யாதே! வலிக்காத வேலை செய் என்று சொல்ல முடியுமா? இயலாதவனை வறுமையில் இருப்பவனை பார்த்து கேள்வி கேட்டால் என்ன சொல்லுவான் சலிப்புக்களுனுடே பழகி போயிடுச்சி என்று தான் சொல்லுவான். அவனுக்கு வேறுவழியில்லை. <BR/><BR/>//// பெரியார் காலத்திலே தானே,சாமிகளும் சன்னியாசிகளும்,யோகிகளும் <BR/>அதிகம் இவர்கள் தாடியில்லாமலா?? இருந்திருப்பார்கள்.<BR/>பார்த்திருப்பார்.. பார்த்தும் பார்க்காதது போல் இருந்திருப்பார்.////<BR/><BR/>"பார்த்தும் பார்க்காதது போல் இருந்திருப்பார்" - பெரியாரா? <BR/><BR/>கண்ணுக்குத் தெரியாத கடவுளையே கேள்விக் கேட்டுக் கொண்டு போனவர். அவர் சமூகவிஷயங்களில் பேசாத விஷயமே இல்லை. பெண்களின் மயிரில் இருந்து கர்பப்பையைக் கூட விட்டு வைக்கவில்லை தோழர். கடவுளுக்கு, மூடநம்பிக்கைக்கு, சமூகத்துக்கு எதிராகவே புரட்சிக் கருத்துக்களை சொன்னவர் இந்த மயிருக்கா பயந்து போய் பார்த்தும் பார்க்காமல் இருந்திருப்பார்?தமிழச்சிhttps://www.blogger.com/profile/06929297278541088680noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-52595906924617661462008-03-08T15:21:00.000+01:002008-03-08T15:21:00.000+01:00//நீங்கள் இளநீர்த் தேங்காய் எனக் குறிப்பிட்டது ,செ...//நீங்கள் இளநீர்த் தேங்காய் எனக் குறிப்பிட்டது ,செவ்விளநீர்த் தேங்காய் எனக் கருதுகிறேன்.<BR/>இந்த விசேட மருந்துநெய் பற்றிய<BR/>செய்முறையை ,ஏன்? நீங்கள் ஓர்<BR/>பதிவாகப் போடக்கூடாது.<BR/>பொடுக்குக்குக் கூட நல்ல மருந்தென்பதால் பலருக்குதவலாம்.//<BR/><BR/>நிச்சயமாக யோகன்.பிரச்சினை என்னவென்றால் நான் இம் மருந்துநெய் செய்துபார்த்தோ,செய்வதைப் பார்த்தோ இல்லை.<BR/>இதுபற்றிய செய்தியை எண்ணெய் செய்யும் அச்சிங்கள மக்கள் வாய்மொழி மூலம் மட்டுமே கேட்டிருக்கிறேன்.<BR/>எனவே நான் அதனைப் பதிவிட்டால் நிறையக் குறைகள் இருக்கும்.<BR/>முடிந்தால் ஊருக்குப் போய் தகவல்களைப் புகைப்படங்களோடு சேர்த்து தனிப் பதிவிடுகிறேன் நண்பரே. <BR/><BR/>//அட கூந்தலழகியின் கையால் கன்னத்தில் தடவப் பட்ட சின்னப் பையனா??<BR/>அந்தச் சின்ன வயதுச் சம்பவம் ஞாபகத்தில் உள்ளதால் ,அவர் கூந்தல்<BR/>ஆச்சரியப்பட வைக்கும் பெரிசாகத்தான்<BR/>இருந்திருக்க வேண்டும்.//<BR/><BR/>ஹா ஹா ஹா... :)<BR/>நம் பால்ய காலத்தில் நம்மீது அன்பு செலுத்தும் யாரையும் நம்மால் எளிதில் மறந்துவிட முடியாது.அவர்கள் அசிங்கமாக இருந்தாலும்,செல்லப் பிராணிகள்,பொம்மைகளாக இருந்தாலும் கூட... :)<BR/><BR/>சிலவேளை திரும்ப அப்பெண்ணை எனக்குச் சந்திக்கநேரிடின் அவருக்கு என்னை அடையாளம் தெரியாமல் போகலாம்.ஆனால் எனக்கு அவரைத் தெரியும் மொட்டையடித்திருந்தாலும் கூட... :)<BR/><BR/>//பிக்குனி பற்றிய தகவல்கள் மிகப் புதியன எனக்கு...இவ்வளவு சோகமுண்டா??<BR/>மாற்றுச் சமய விடயத்தை மிக நேர்த்தியாக அறிந்துள்ளீர்கள் ..தொடருங்கள்.//<BR/><BR/>இலங்கையில் எனது ஊரைச் சுற்றிய பக்கத்துக் கிராமங்கள் அனைத்திலும் சிங்களவர்களே வசிக்கின்றனர்.<BR/>விவசாயக்கூலிகளாக,வீட்டு வேலைக்காரர்களாக,சிங்களப்பாட ஆசிரியர்களாக,கூட்டுறவுக்கடை சேவையாளராக,மருத்துவத் தாதிகளாக,மரக்கறிச்சந்தை விற்பனையாளராக,மீன்காரராக,மின்சார சபை,குழாய் நீர்ச்சபை ஊழியர்களாக என தினம் தினம் பல சிங்கள மக்கள் எனது ஊருக்கு வந்துபோய்க் கொண்டிருப்பர்.<BR/>நானும் சிறுவயதில் அவர்களுடன் சேர்ந்து எமது வயலில் நாற்று நட்டிருக்கிறேன்.ஏர் ஓட்டியிருக்கிறேன்.<BR/>மற்றும் வங்கிகளுக்கும்,,குளிப்பதற்காக ஆற்றுக்குப் போகவும்,சமய வழிபாடுகளிற்காக விகாரைக்கும் எனது ஊருக்கே வரவேண்டும்.<BR/>எனவே அவர்களது கலாச்சாரங்கள்,பழக்கவழக்கங்கள்,சமய முறைகள் எனக்கு ஓரளவு தெரியும்.<BR/><BR/>உண்மையில் எனக்கு நேரில் அறிமுகமான தமிழர்கள் மிகக் குறைவு.<BR/><BR/>எனது வாழ்க்கையில் முதன்முதல் அறிமுகமான தமிழர் என்றால் எனது 14வயதில் கணிதப்பாட ஆசிரியராக ஒரு யாழ்ப்பாணத்தவர்.இவரே நான் உயர்தரம் கற்கும்போது இரசாயனவியலும் கற்பித்தார்.<BR/><BR/>அடுத்தவர் எனது உயர்தர வகுப்புத்தோழி.இவர் அவ்வாசிரியரின் மருமகள்.இப்பொழுது திருமணம் முடித்து வெளிநாடொன்றில் வசிக்கிறார்.தொடர்புகளில்லை.<BR/>இவரும் யாழ்ப்பாணத்தவர்.<BR/><BR/>இறுதியானவர் எமது ஊரில் கூலி வேலைக்காக வந்துபோகும் ஒரு பெண்.<BR/>50ஐத் தாண்டிய வயது.இவரும் யாழ்ப்பாணத்தவர்.சிறுவயதிலேயே காதலுக்காக வீட்டைத் துறந்து காதலனுடன் எமது ஊருக்கு வந்தவர்.<BR/>ஒரு கைக்குழந்தையைக் கொடுத்துவிட்டு கணவன் இறந்துவிட மிகுந்த தன்னம்பிக்கையோடு கூலிவேலைகள் செய்து தன் மகளோடு வாழ்ந்துவருபவர்.<BR/>எனது அம்மாவின் தோழி.<BR/>ஏதாவது பிரச்சினைகள் என்றால் என்னிடம் சொல்வார்.<BR/><BR/>இவரது சகோதரி கூட இந்தியத் தமிழ் சினிமாக்களில் நடிக்கும் ஆர்வத்தில் இந்தியா சென்றவராம்.பின்னர் அது பற்றிய எந்தத்தகவலும் இல்லை.<BR/><BR/>'மிருகம்' பட நாயகியின் பாத்திரம் முழுக்க முழுக்கக் கற்பனை எனக்கூறும் நண்பர்களுக்கு நான் இவரைக் காட்டத்தயார்.<BR/>அந்த நாயகி செய்யும் அத்தனை காரியங்களையும் இவர் செய்கிறார்.<BR/>தென்னை மரம் கூட ஏறுகிறார்.<BR/>மிகுந்த தன்மானம் மிக்கவர்.<BR/>தனது கூலியைத்தவிர மேலதிகமாக ஒரு சதம் கூட வாங்கமாட்டார்.<BR/>தனது ஆடைகளைக் கூட தானே கை ஊசியால் தைத்து அணிவார்.<BR/>எந்தவொரு வீண் அலங்காரங்களும் இல்லை.ஒவ்வொரு வெள்ளியும் தவறாமல் கோயில் போவார்.<BR/>என்னை எப்பொழுதும் மிக ஆச்சரியத்தில் ஆழ்த்தும் பெண்மணி இவர்.<BR/><BR/>இணைய நண்பர்கள்,இவர்கள் மூவரைத் தவிர வேறு தமிழர்கள் அவ்வளவாகப் பழக்கமில்லை.<BR/><BR/>அன்பின் யோகன்,நீங்களும் யாழ்ப்பாணத்தவர் தானே... ?<BR/>உங்கள் பழக்கவழக்கங்கள்,சமூக முறைகள் பற்றி ஒரு பதிவு இடலாமே நண்பரே.எனக்குத் தெரிந்துகொள்ள ஆசை.<BR/>அதனால்தான் உரிமையோடு கேட்கிறேன்.<BR/><BR/>//படங்கள் சென்று பார்ப்பேன்.//<BR/><BR/>நிச்சயமாக நண்பரே :)<BR/><BR/>//தற்போது நீங்கள் எங்கே உள்ளீர்கள்?//<BR/><BR/>தற்பொழுது தொழில்நிமித்தம் கத்தார் நாட்டில் தனியாக வசிக்கிறேன்.மனம் மட்டும் ஊரிலேயே ... :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-63991911770787487282008-03-08T09:29:00.000+01:002008-03-08T09:29:00.000+01:00//தாடி வைத்ததற்காக பெரியாரைச் சோம்பேறி எனச் சொல்லவ...//தாடி வைத்ததற்காக பெரியாரைச் சோம்பேறி எனச் சொல்லவேண்டாம்.//<BR/><BR/>If he can call others as சோம்பேறி, he will be called the same by others too :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-6870851679625162662008-03-08T00:53:00.000+01:002008-03-08T00:53:00.000+01:00ரிஷான்!மிக விரிவான பல தகவல்கள் அடங்கிய பின்னூட்டத்...ரிஷான்!<BR/>மிக விரிவான பல தகவல்கள் அடங்கிய பின்னூட்டத்துக்கு மிக்கநன்றி!<BR/>நீங்கள் இளநீர்த் தேங்காய் எனக் குறிப்பிட்டது ,செவ்விளநீர்த் தேங்காய் எனக் கருதுகிறேன்.<BR/>இந்த விசேட மருந்துநெய் பற்றிய<BR/>செய்முறையை ,ஏன்? நீங்கள் ஓர்<BR/>பதிவாகப் போடக்கூடாது.<BR/>பொடுக்குக்குக் கூட நல்ல மருந்தென்பதால் பலருக்குதவலாம்.<BR/><BR/>அட கூந்தலழகியின் கையால் கன்னத்தில் தடவப் பட்ட சின்னப் பையனா??<BR/>அந்தச் சின்ன வயதுச் சம்பவம் ஞாபகத்தில் உள்ளதால் ,அவர் கூந்தல்<BR/>ஆச்சரியப்பட வைக்கும் பெரிசாகத்தான்<BR/>இருந்திருக்க வேண்டும்.<BR/><BR/>பிக்குனி பற்றிய தகவல்கள் மிகப் புதியன எனக்கு...இவ்வளவு சோகமுண்டா??<BR/>மாற்றுச் சமய விடயத்தை மிக நேர்த்தியாக அறிந்துள்ளீர்கள் ..தொடருங்கள்.<BR/>படங்கள் சென்று பார்ப்பேன்.<BR/>தற்போது நீங்கள் எங்கே உள்ளீர்கள்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-52028793268278347452008-03-07T22:22:00.000+01:002008-03-07T22:22:00.000+01:00அன்பின் யோகன்,//இலங்கையில் சிங்களப் பெண்களுக்குநீள...அன்பின் யோகன்,<BR/><BR/>//இலங்கையில் சிங்களப் பெண்களுக்கு<BR/>நீளமான முடியே! அவர்கள் தேங்காய்<BR/>எண்ணை பாவிப்பதும் ஒருகாரணமோ<BR/>தெரியவில்லை.//<BR/><BR/>நிச்சயமாக.சாதாரண தேங்காயெண்ணெய் அல்ல.<BR/>இளநீர்த் தேங்காயெண்ணையில்,வல்லாரை,கறிவேப்பிலை,மருதோன்றி விதை,கரிசலாங்கண்ணி,இன்னும் வேர்கள்,சில கீரைகள் மண் பானையில் கலந்து தலையில் பூசுவதற்காகவே புதிதாக ஒவ்வொரு முறை காய்ச்சுகிறார்கள்.<BR/>எனக்கு எப்படித் தெரியுமெனில் எனது வீட்டிலும்,ஊரில் பல வீடுகளிலும் அவர்களுக்கு காசு கொடுத்து செய்து தரச் சொல்வோம்.<BR/>எண்ணைய்யில் குளிர்மையோடு நற்சுகந்தமும் வீசும்.<BR/>முடி உதிர்தலோ,பொடுகோ,முடி செம்பட்டை நிறமாவதோ வருவதில்லை.<BR/><BR/>வீடுகளில் ஆண்,பெண் பேதம் பார்க்காமல் பாவிக்கிறோம்.<BR/>இங்கு வந்த பிறகும் அம்மாவிடம் ஒரு போத்தல் வாங்கியனுப்பச் சொல்லியிருக்கிறேன்... :)<BR/><BR/>//ரிஷான்!<BR/>நீங்களும் பின்னால் போயிருக்கலாம்; சிறுபையன் தானே ,யாரும் தவறாக ஏன் அந்தப் பெண்கூட தவறாக எடுத்திருக்கமாட்டார்.//<BR/><BR/>இல்லை.நான் அப்போது மிகச் சின்னவன்.வாசலில் இருக்கும் போது அப்பெண் வீதியில் போனால் புன்னகைத்து விட்டோ,கைக்கெட்டும் தூரத்தில் இருந்தால் கன்னத்தைத் தட்டிவிட்டோ போவார்.பிறகெங்கே நான் பின்னால் செல்வது ? :(<BR/><BR/>//பின் வந்த நாட்களில் அவள் பிக்குனியாகி விட்டாள்.தலை மொட்டையடித்து,காவியுடை தரித்தாள்.<BR/>ஏதாவது காதல் தோல்வி காரணமாக இருக்கலாம்//<BR/><BR/>//காதலில் தோல்வியெனில் பௌத்தப் பெண்களுக்கு இப்படியும் ஒரு வசதி உண்டா??; அவரைப் பாராட்டுகிறேன். தற்கொலை செய்யாது வாழ்ந்து காட்டியதற்கு...அதுவும் பிக்குனியாக//<BR/><BR/>இலங்கையில் உள்ள எல்லாப் பிக்குனிகளும் வாழ்க்கையில் ஏதோவொரு விரக்தியுற்று பிக்குனியானவர்கள் தாம்.<BR/><BR/>ஆண் பிக்குகளுக்கு அப்படியில்லை.<BR/>பெற்றோர் நேர்த்திக்கடன் வைத்து,அல்லது வறுமை காரணமாக,அல்லது அதிகப்படியான குழப்படி காரணமாக தங்கள் மகனை சிறுவயதிலேயே விகாரையில் பிக்குவாக்கி விடுவார்கள்.<BR/>பெரிய ஆண்களும் வாழ்க்கையில் விரக்தியுற்று அல்லது சுய விருப்பத்தின் காரணமாக பிக்குவானதுண்டு.<BR/><BR/>ஆனால் இலங்கைப் பெண்களால் சிறுவயதில் பிக்குனியாகி விட முடியாது.<BR/>18 வயது கண்டிப்பாகத் தாண்டியிருக்க வேண்டும்.<BR/>கல்யாணமாகியிருக்கக் கூடாது.(விதவையாகி,யாருமற்று,ஆதரவற்று இருப்பின் முடியும்.அவர்கள் ஆடை வெள்ளை நிறத்தில் இருக்கும்.விகாரைகளில் தங்கி சேவை செய்வார்கள்.தீபா மேத்தாவின் 'வாட்டர்' திரைப்படத்தில் பார்த்திருப்பீர்கள் )<BR/><BR/>அடுத்து ஆடை விடயத்தில் பிக்குனிகள் முழு நீளசட்டையணிந்தே காவியாடை உடுத்தவேண்டும்.தலைமயிர் நீக்கி,ஆபரணங்களை அகற்றவேண்டும்.<BR/>அவர்கள் தங்குவதற்கென்று தனியாக விகாரைகள் உண்டு.<BR/><BR/>இக்காவியாடைகளின் காவி நிறம் பச்சிலைகளின் சாயம் கொண்டே முற்காலத்தில் ஊட்டப்பட்டுள்ளன.<BR/>தற்பொழுது எப்படியெனத் தெரியவில்லை.<BR/><BR/>இலங்கைப் பிக்குகளின் புகைப்படங்களை <BR/>http://msmrishan.blogspot.com/2007/08/srilankan-buddas_06.html<BR/>எனது இப்பதிவிலும்,<BR/><BR/><BR/>இலங்கைப் பிக்குனியொருவரின் புகைப்படத்தை <BR/>http://msmrishan.blogspot.com/2007/08/my-country-people.html<BR/>எனது இப்பதிவிலும் பார்க்கலாம் நண்பரே... :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-87048634773071838462008-03-07T13:17:00.000+01:002008-03-07T13:17:00.000+01:00//நீளக் கூந்தல் இருந்தால் குடும்ப வாழ்க்கை நல்லயிர...//நீளக் கூந்தல் இருந்தால் குடும்ப வாழ்க்கை நல்லயிருக்காதமே மெஇய்யாலுமா? //<BR/><BR/>மீறல்!<BR/>"கொடிக் கூந்தலாள் குடும்பத்திற்காகாள்" இப்படி ஒரு சொல்வழக்குண்டு. <BR/>இந்தப் பழமொழிகள் ,சொல்வழக்குகள் பற்றி மறைந்த எழுத்தாளர் திரு.சுஜாதா<BR/>அவர்கள் " எதுகை மோனையுடன் வரும் பழமொழிகள்;சொல்வழக்குகள்,நடைமுறைக்கு ஒவ்வாதவை " என்று கூறியதே ஞாபகம் வருகிறது.<BR/>இங்கே பின்னூட்டமிட்டுள்ள துளசியக்காவின் பாட்டி, தாயாரெல்லாம் நன்கு வாழ்ந்து; குடும்பங்களையும்<BR/>சிறப்புடன் தான் வாழவைத்துள்ளார்கள். அதுவும் துளசியக்கா தாயார் ஒரு டாக்டராக இருந்துள்ளார்.<BR/>துளசியக்கா போல் ஒரு திறமைசாலியையும் உருவாக்கியுள்ளார்.<BR/>இப்படி இன்னும் பலர் இருக்கலாம்.<BR/>குறுகிய கூந்தலாள் உள்ள வீடுகளில் எல்லாம் குதூகலம் கொட்டுதென்று சொல்லமுடியுமா??<BR/>எனவே இந்தப் பழமொழிகள் "சுஜாதா" சொன்னவை போன்றதே!!!<BR/>உங்களுக்கு;நல்ல நீளமுடியானால் சீவி முடிச்சு சிங்காரித்து வாழுங்கள்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-28757053492979966362008-03-07T13:01:00.000+01:002008-03-07T13:01:00.000+01:00//இவள் வீதியில் நடந்தால் இளைஞர்கள் பின்னால் செல்வத...//இவள் வீதியில் நடந்தால் இளைஞர்கள் பின்னால் செல்வதைப் பார்த்திருக்கிறேன்.<BR/>[நான் என்ன செய்தேன் என்று கேட்க வேண்டாம் நண்பரே.நான் அப்பொழுது சிறு பையன் :)]//<BR/><BR/>ரிஷான்!<BR/>நீங்களும் பின்னால் போயிருக்கலாம்; சிறுபையன் தானே ,யாரும் தவறாக ஏன் அந்தப் பெண்கூட தவறாக எடுத்திருக்கமாட்டார்.<BR/><BR/>//பின் வந்த நாட்களில் அவள் பிக்குனியாகி விட்டாள்.தலை மொட்டையடித்து,காவியுடை தரித்தாள்.<BR/>ஏதாவது காதல் தோல்வி காரணமாக இருக்கலாம்//<BR/><BR/>காதலில் தோல்வியெனில் பௌத்தப் பெண்களுக்கு இப்படியும் ஒரு வசதி உண்டா??; அவரைப் பாராட்டுகிறேன். தற்கொலை செய்யாது வாழ்ந்து காட்டியதற்கு...அதுவும் பிக்குனியாக<BR/><BR/>//இறந்த காலங்கள் எம் மனதில் ஏதோவொன்றை விதைத்துச் செல்கின்றன.//<BR/>பல இறந்த காலங்கள் எல்லோருக்குமே மீட்டுப் பார்க்கும் போது; ஏக்கம் கலந்த சுகம் இருக்கும்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-49128697800175512362008-03-07T00:15:00.000+01:002008-03-07T00:15:00.000+01:00வால்பையா?லேபிளில் இது அபூர்வமான ,ஆச்சரியப்பட வைக்க...வால்பையா?<BR/>லேபிளில் இது அபூர்வமான ,ஆச்சரியப்பட வைக்கும் விடயமென்பதால் ஆச்சரியம் என்றேன்.<BR/>படத்தில் பெண் அதனால் பெண்.<BR/><BR/>பெரியதை, நீளமானதை பெரிசு என்போம்.<BR/><BR/>இதை விட பெரிசா?? கணனி மொழியும் தெரியாது.<BR/>அப்போ என்ன?? போடவேண்டும் <BR/>சொல்லியாவது தாருங்கள்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-64186402743473294312008-03-07T00:11:00.000+01:002008-03-07T00:11:00.000+01:00//இருக்கலாம். அதுக்காக பெரியார் கண்ணாடியே பார்க்கவ...//இருக்கலாம். அதுக்காக பெரியார் கண்ணாடியே பார்க்கவில்லை என்று மழுப்பக்கூடாது.//<BR/><BR/>அநாமி...விட்டு விடுங்கள்.<BR/>நன்றியோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-86896689665392892272008-03-07T00:08:00.000+01:002008-03-07T00:08:00.000+01:00அன்புடன் சகோதரி தமிழிச்சி!தங்கள் பின்னூட்டம் ,சற்ற...அன்புடன் சகோதரி தமிழிச்சி!<BR/>தங்கள் பின்னூட்டம் ,சற்று பகிடி கலந்திருப்பதால் நானும் பகிடியாகவே<BR/>கூறுகிறேன்.<BR/>//மனநலம் படித்தவருக்கு மனநிலை மருத்துவரைத் தேடி போக வேண்டியதில்லை தோழர்.//<BR/><BR/>மனம் நலம் படித்தவர்களுக்குக் கூட<BR/>மன நலம் பிரள்வது உண்டு. அப்போ<BR/>மருத்துவரிடம் போயே ஆக வேண்டும். <BR/>//இந்த மேட்டரை நாமே பேசி தீர்த்துவிடலாம்//<BR/>நிச்சயம் அதுவே எனக்குப் பிடிக்கும்<BR/>ஆம், உடை நடை என்பது பற்றி சுதந்திரம்,சமத்துவம்,சகோதரத்துவம்<BR/>என்னும் பிரான்சிலும் தனிச் சட்ட திட்டம் உண்டு.<BR/>ஆனால் இந்தப் பெண் இப்படியே தலைவிரி கோலமாகவா??வேலைக்கு<BR/>வரப்போகிறார்.<BR/>இல்லை, நீங்களே பார்த்தீர்களே அந்தப் பெண்னின் தலையில் இவ்வளவு பெரிய முடி என்பது தெரிந்ததா?? இப்படி நேர்த்தியாக வந்தால் எங்கும் தடையில்லை.<BR/>இலங்கையில் நான் பார்த்த பெண்<BR/>பின்னிவிட்டிருந்தார். இருக்கும் போது லாவகமாக கதிரைப் பின் பக்கத்தில்<BR/>சுற்றி விட்டிருந்தார்.கொள்ளை அழகு.<BR/>இவர்கள் பிரான்சில் வந்து வேலை<BR/>தேடுவார்கள் என்பது அதீத கற்பனை.<BR/>அப்படி வந்தாலும் முக்காட்டுக்கு நீதிமன்றமேற சங்கங்கள் உதவியது போல் ,இதற்கும் நாலு பேர் வராமலா?<BR/>போய்விடுவார்கள்.<BR/>//இந்த சாதனைக்குப் பிண்ணனியில் பல பிரச்சனைகள் அந்த பெண்ணுக்கு கண்டிப்பாக இருக்கும்//<BR/><BR/>கண்டிப்பாக , எல்லாச் சாதனையாளர்களும் எதாவதை இழந்தே இருப்பார்கள்.உங்களை,<BR/>அப்துல் கலாம் ஐயா போல்..<BR/><BR/>நீங்கள் கூறும் கழுத்துவலி,தலைவலி<BR/>பற்றி என்னால் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவ்வளவு பாரமாக இருக்குமா?? ஆனால் ஓரளவு<BR/>வயதில் இருந்தே பழக்கப்பட்டிருப்பதால், இதற்குச் சாத்தியமில்லை என நினைக்கிறேன்.<BR/>இலங்கையில் தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து கொய்யும் பெண்கள் ஒரு நாளுக்கு சுமார் 8 மணிநேரம் கொழுந்துக் கூடையை சுமார் 15 கிலோ கொழுந்துடன் சுமந்து<BR/>மலை ஏறுவார்கள்,அக்கூடைப் பட்டி<BR/>தலையில் இருந்தே தொங்கும், அவர்கள் கழுத்து நோ, தலைவலி என<BR/>அவதிப்பட்டதில்லை.அவர்களுடன் பேசக்கிடைத்தபோது கேட்டேன்.பழகிப் போய்விட்டது என்றார்கள்.40 வருடம்<BR/>அதே வேலையைத் தினம் செய்தோரைத்<BR/>தெரியும் . வலியிருந்தால் இவ்வள்வு காலம் செய்யமாட்டார்கள்.<BR/>அமேசன் பழங்குடியினரும் அப்படியே<BR/>சுமக்கிறார்கள்.<BR/><BR/>//அவர் வாழ்ந்த காலத்தில் ஆண்கள் இந்த அளவுக்கு நீண்ட தாடியை வைத்திருந்திருந்து பார்த்திருக்கவில்லையோ? என்னவோ? பார்த்தால் விட்டிருப்பாரா? //<BR/><BR/>பெரியார் காலத்திலே தானே,சாமிகளும் சன்னியாசிகளும்,யோகிகளும் அதிகம் இவர்கள் தாடியில்லாமலா?? இருந்திருப்பார்கள்.<BR/>பார்த்திருப்பார்..பார்த்தும் பார்க்காததுபோல் இருந்திருப்பார்.<BR/><BR/>//நான் தமிழ்படிக்க ஆரம்பித்த போது ஒரு பாடல் அதில் உண்டு. மாடி மேலே தாத்தாவுக்கு காடு போல தாடியாம். மாடி மேலே நிற்கும் போது தாடி மண்ணில் புரலுமாம். அப்புறம் ஞாபகமில்லை.//<BR/><BR/>விரும்பினால் சொல்லுங்கள், நீங்கள்<BR/>தமிழ் எங்கே எதுவரை படித்தீர்கள்.<BR/>தமிழுடன் துணிவையும் கற்றுள்ளீர்கள்<BR/>அதுதான் கேட்டேன்.<BR/><BR/>//coure ஸ்டைல் வைத்திருந்தேன்//<BR/><BR/>இந்த ஸ்டைல் என்ன? என்று உண்மையிலே தெரியாது.<BR/><BR/>//இந்த பொண்ணு தரையில நின்னா முடி கீழ விழும். அதனால எது மேலேயாவது ஏறிகொண்டு தான் இருப்பார்கள் என்று நினைக்கின்றேன். எட்ட இருந்து பார்த்தலே எல்எல்லாம் தெரிந்து விடும் கிட்ட போய் பார்க்க வேண்டியதில்லை. //<BR/><BR/>இந்தப் பெண்ணுக்கு எல்லாம் மரத்திலே எனும் முடிவுக்கு வந்து விட்டீங்க... ஆனாலும் அந்தப் பெண்ணை நீங்க நல்லாக் கேலி செய்கிறீங்க.<BR/><BR/>//உங்களுக்கு சுனாமி கதை தெரியுமா? சுனாமியில் இறந்தவர்களில் ஆண்கள் பிணங்களை விட பெண்கள் பிணங்கள் நிறைய கிடைத்ததற்கு காரணம் பெண்களின் முடிகள் மரங்களுக்கிடையில் சிக்கிக் கொண்டு கிடந்தது தான். இந்த விஷயத்தையும் ஆராயலாம். மேற்கொண்டு எழுத நேரமில்லை //<BR/><BR/>உங்கள் படிப்பு எல்லாவற்றையும் ஆராய வைக்கிறது.<BR/>என் சிற்றறிவு எப்படிப் பார்க்குதெனில்<BR/>முடிதான் காரணமெனில் , முடிகுறைந்த ஆண்கள் ஏன் இறந்தார்கள்.<BR/>ஆண்களும் பலர் இறந்தபோதும் அவர்களுக்கு முடி இல்லாததால் மரங்களுக்குள் சிக்கி உடல் கூடக் கிடைக்காது போய் விட்டது.பெண்கள் உடல் முடி மரங்களுடன் சிக்கியதால்<BR/>கிடைத்தது.<BR/><BR/>முக்கியமாக ...<BR/>தங்கள் இரண்டாவது பின்னூட்டத்தில்<BR/>தமிழிச்சி ரசிகன்...உங்களை அநாகரீகமாக தாக்கி விமர்சித்த பின்னூட்டத்தை வெளியிட்டதாகக் கூறியுள்ளீர்கள்,<BR/>அவர் உங்களையல்ல என்னைத்தான்<BR/>திட்டிச்,சாகும்படி கேட்டுள்ளார். நன்கு<BR/>பார்க்கவும்.<BR/>உங்களுக்கு மனவருத்தம் தரக்கூடியதானால் கட்டாயம் எடுத்துவிடுவேன்.<BR/>அதை வெளியிடாமல் இருந்தால் அவர் நான் ஏதோ பயந்து விட்டேன்.<BR/>என நினைப்பார் அத்னால் தான்..வெளியிட்டேன்.<BR/>அது தன் குணத்தைக் காட்டியுள்ளது.<BR/>ஆனால் அதில் உங்களைச் சாடி எதுவும் இல்லை.<BR/>தமிழிச்சி ரசிகன் என்பது தவிர..<BR/>அதை எடுக்கவேண்டுமென நீங்கள் விரும்பும் பட்சத்தில் ,எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.<BR/>உங்கள் மேல் எனக்கு என்றும் மரியாதை உண்டு.<BR/>பின்னூட்டமிடாவிடிலும் தங்கள் பதிவுகள் படிப்பேன்.அந்த மொடல் அழகியின் மரணம் பற்றிப் படித்தேன்.அதிர்ச்சியாக இருந்தது.<BR/>நம்பக் கஸ்டமாகவும் இருந்தது.<BR/>நன்றியோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-55816314995157423622008-03-06T22:48:00.000+01:002008-03-06T22:48:00.000+01:00ராகவா?எனக்கு மயில் தோகை போல் தெரிந்தது, உங்களுக்கு...ராகவா?<BR/>எனக்கு மயில் தோகை போல் தெரிந்தது, உங்களுக்குப் பேய் போலா தெரிகிறது.<BR/>நீங்கள் பேயைக் கண்டுள்ளீர்களா??<BR/>தமிழிச்சிக்கு ஒருவகை மிருகமாகத்<BR/>தெரிந்துள்ளது.<BR/>அந்தப் பெண் ஒரு தடவை வாரிச்சுற்றினால் நாள் பூரா, அப்படியே<BR/>இருக்கும் போல் உள்ளது.<BR/>நீங்கள் கருதுவதுபோல், கூந்தலே<BR/>வாழ்க்கையாகவில்லைப் போல் உள்ளது.<BR/>இதே பக்கத்தில் பல வேறு படங்களும்<BR/>பார்த்தேன்.மகிழ்வாகத் தான் உள்ளார்கள் போல் உள்ளது.<BR/>சிரமமானால் வெட்டியிருப்பார்களே??<BR/>இப்படியே இருக்கவேண்டுமெனும் நேர்த்தியா???புரியவில்லை.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-73219626240327864062008-03-06T22:37:00.000+01:002008-03-06T22:37:00.000+01:00தமிழ்ப்பிரியன்!இலங்கையில் சிங்களப் பெண்களுக்குநீளம...தமிழ்ப்பிரியன்!<BR/>இலங்கையில் சிங்களப் பெண்களுக்கு<BR/>நீளமான முடியே! அவர்கள் தேங்காய்<BR/>எண்ணை பாவிப்பதும் ஒருகாரணமோ<BR/>தெரியவில்லை.<BR/>அவர்களது உடலில் ஒட்டியுள்ளது, சிரமமானாலும் செய்ய வேண்டியதே!<BR/>எந்தப் பெண்ணும் எவ்வளவு சிரமமிருந்தாலும் முடி கொட்டுவதை<BR/>விரும்புவதில்லை.<BR/>சுகமான சுமைதான் அவர்களுக்கு...யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-28162709142323015432008-03-06T22:30:00.000+01:002008-03-06T22:30:00.000+01:00முதல் வந்து அநாமியாகக் கருத்துக்கூறிய அன்பருக்கு.ந...முதல் வந்து அநாமியாகக் கருத்துக்கூறிய அன்பருக்கு.<BR/><BR/>நீங்கள் பெரியார் பற்றிக் கூறியவை உண்மையாகவும் இருக்கலாம்.ஆனால்<BR/>சிலர் முதுமையில் உடலில் நீர் ஊற்ற மறுப்பதை அவதானித்துள்ளேன்.<BR/>பிரபலமானவரானதால் அது வெளியே<BR/>தெரிந்திருக்கலாம்.பிரான்சின் சென்ற வருடம் இயற்கை எய்திய சமூகப் பணியாளர் அபே பியர் எனும் முதியவருக்கு இப்படி ஒரு பழக்கம் இருந்ததாம் ,ஆனால் அவரை நெருங்காதோர் இல்லை.ஜனாதிபதி சிராக் வரை.<BR/><BR/>மேலும் பெரியாரின் மனைவி பற்றி மிகக் கவலைப் பட்டுள்ளீர். அதுவும்<BR/>அவர் சொற்ப வயது பற்றி.<BR/>ஆனால் நமது வைத்தியசாலைகளில்<BR/>புண்களுடன் நாறும் எத்தனையோ பேரை மிக வயது குறைந்த தாதிமாரே<BR/>கழுவி மருந்திடுகிறார்கள்.<BR/>சேவை என மனம் கருதினால் இவற்றைக் கருத்தில் கொள்ளாது.<BR/><BR/>உங்களுக்கு ஒரு விடயம் 'கருவாட்டுக்குள் புழு எனக் கதறும் நாம் கத்தரிக்காய்க்குள் புழுவை'<BR/>மறைக்கிறோம். சிக்கலில் சிக்கிய சங்கராச்சாரியார் பல்லு விளக்குகிறேன் எனச் சத்தியம் பண்ணினாலும் நம்புவீர்களா??<BR/>அவருக்கு உள்ள வசதிக்கு ஏன்? அதைச் செய்யக் கூடாது.<BR/>அவரை எத்தனை ஆயிரம் பேர் ஆசிக்கென நெருங்குகிறார்கள்.<BR/>மறைந்த பாப்பரசர் ஜோன் பால் 2<BR/>தள்ளாத வயதிலும் என்ன?? மாதிரி<BR/>இருந்தார்.<BR/><BR/>தாடி வைத்ததற்காக பெரியாரைச் சோம்பேறி எனச் சொல்லவேண்டாம்.<BR/>இந்தச் சோம்பேறி பலருக்குச் சிம்மசொற்பனமாக இருந்து, தமிழகத்தின் தலையெழுத்தையே<BR/>தலைகீழாகியது உங்களுக்குத் தெரியாத<BR/>தல்ல.<BR/>எனவே நமக்குப் பிடிக்கவில்லையென்பதால் குறைத்து<BR/>எடை போடக் வேண்டாம்.<BR/>அதுவும் மறைந்திருந்து....யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-20134487947322630102008-03-06T18:56:00.000+01:002008-03-06T18:56:00.000+01:00நீளக் கூந்தல் இருந்தால் குடும்ப வாழ்க்கை நல்லயிருக...நீளக் கூந்தல் இருந்தால் குடும்ப வாழ்க்கை நல்லயிருக்காதமே மெஇய்யாலுமா? எனது தோழி இப்பிடிச் சொல்லி சில வருடங்களின் முன்னால் 15cm வெட்டிக் கொண்டார்.மீறல்https://www.blogger.com/profile/09148451051863373632noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-82091232420900476632008-03-06T17:14:00.000+01:002008-03-06T17:14:00.000+01:00அன்பின் யோகன்,இது போல ஒரு நீள்கூந்தல் சிங்களப் பெண...அன்பின் யோகன்,<BR/>இது போல ஒரு நீள்கூந்தல் சிங்களப் பெண் எனது ஊரில் இருந்தாள்.நல்ல சிவப்பு நிறமவள் முழங்கால் கீழ் நீளும் கூந்தலை பின்னலிட்டு வேலைக்குப் போவாள்.<BR/>ஏதோ கூட்டுறவுக் கடையில் வேலை செய்தாளென்று நினைக்கிறேன்.<BR/><BR/>இவள் வீதியில் நடந்தால் இளைஞர்கள் பின்னால் செல்வதைப் பார்த்திருக்கிறேன்.<BR/>[நான் என்ன செய்தேன் என்று கேட்க வேண்டாம் நண்பரே.நான் அப்பொழுது சிறு பையன் :)]<BR/><BR/>பின் வந்த நாட்களில் அவள் பிக்குனியாகி விட்டாள்.தலை மொட்டையடித்து,காவியுடை தரித்தாள்.<BR/>ஏதாவது காதல் தோல்வி காரணமாக இருக்கலாம்.<BR/>உங்கள் பதிவு அவளை ஞாபகப்படுத்தி விட்டது.<BR/><BR/>இறந்த காலங்கள் எம் மனதில் ஏதோவொன்றை விதைத்துச் செல்கின்றன.<BR/>சில ஒத்த விடயங்கள் நீர்த்துளியாய் மனதை நனைக்க பழைய நினைவுகள் பீறிட்டுக் கிளம்புகின்றன.<BR/><BR/>நன்றி நண்பரே :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-61040986601006710872008-03-06T15:45:00.000+01:002008-03-06T15:45:00.000+01:00தோழர் யோகன் பாரீஸ் அவர்களுக்கு,இங்கு ஒருவர் "தமிழச...தோழர் யோகன் பாரீஸ் அவர்களுக்கு,<BR/><BR/>இங்கு ஒருவர் "தமிழச்சி ரசிகன்" என்ற பெயரில் அநாகரிகமான முறையில் என்னை தாக்கி விமர்சித்து பின்னூட்டம் போட்டுள்ளதை அனுமதித்து இருக்கின்றீர்கள். நான் எழுதிய யோனிப்பிரச்னை, பெண்களின் அங்கங்கள் வெட்டுவது குறித்து பாலீயல் வன்முறைக்கு உட்படுத்தப்படும் பெண் குழந்தைகளுக்காக எழுதப்பட்டது. இது உங்களுடைய தளம் தான். <BR/>எதை அனுமதிப்பது எதை அனுமதிக்கக் கூடாது என்ற உரிமை உங்களுக்கு மட்டுமே உண்டு. நான் எழுதியது அநாகரிகமான முறையில் என்று இரு பெண் குழந்தைகளுக்கு தகப்பனான நீங்கள் நினைத்தால் அந்த பின்னூட்டம் அப்படியே இருக்கட்டும்.தமிழச்சிhttps://www.blogger.com/profile/06929297278541088680noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-91772177579891273022008-03-06T14:05:00.000+01:002008-03-06T14:05:00.000+01:00அதென்ன லேபிளில் ஆச்சர்யம் ,பெண் ,பெருசு !!வால்பையன...அதென்ன லேபிளில் ஆச்சர்யம் ,பெண் ,பெருசு !!<BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-18595638015409441402008-03-06T12:26:00.000+01:002008-03-06T12:26:00.000+01:00Doubting Thomas !!"///பெரியார் சொல்லுவார் "நீள முட...Doubting Thomas !!<BR/>"///பெரியார் சொல்லுவார் "நீள முடி உள்ளவள் சோம்பேறி" அதற்காகன பராமரிப்புக்கு காலம் விரயம் தானே தவிர அதன் பயன் வேறொன்றும் இல்லை என்பார்.//<BR/><BR/>Agreed. Why did he have a long beard?!!!!!//"<BR/>அன்பரே!<BR/>தங்கள் கேள்விக்கு சகோதரி தமிழிச்சி...பதிலிட்டுள்ளார்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-38184351421220308842008-03-06T12:22:00.000+01:002008-03-06T12:22:00.000+01:00தம்பி! தமிழச்சி பித்தன்!மன்னிக்கவும் ரசிகன்;(அதிக ...தம்பி! தமிழச்சி பித்தன்!<BR/>மன்னிக்கவும் ரசிகன்;(அதிக ரசிப்புத் தன்மையைப் பித்தம் எனலாம்) மிக்க நன்றி ,மூளை என்ற வார்த்தையை உங்கள் பின்னூட்டதில்<BR/>பார்த்ததும் மயிர் சில்லிட்டது.<BR/>என்னைப் பெற்றோர்,உற்றோர்,நண்பர்கள்,பழகியவர்கள் அனைவருமே "மூளை இல்லாதவன்"<BR/>எனவே முன்னாலும்;பின்னாலும் கூறுவார்கள்.<BR/>நீங்கள் ஒருவர் தான் குப்பை மூளையாவது இருக்குது...என்பதைச் சொல்லித் திக்கு முக்காட வைத்து<BR/>விட்டீர்கள்.<BR/> பாம்பின் காலைப் பாம்பு அறியுமெனக் கொள்கிறேன்.<BR/>இதுக்கையேன் சிவவே என்றிருக்கும் டோண்டு அண்ணாவை இழுக்கிறீர்கள்.<BR/>நாய்க்கு எங்கே அடித்தாலும் பின்னங்காலைத் தூக்குமாம்; அதுபோல் எல்லாவற்றிற்கும் டோண்டு அண்ணாவை இழுத்தால்;சுணையில்லாமல் போய் விடும்.<BR/><BR/>நீங்கள் சாகச் சொல்லுகிறீர்கள்; அருள் கூர்ந்து மன்னிக்க வேண்டும். உடன் தங்கள் ஆசையை நிறை<BR/>வேற்றி ,தங்களை ஆனந்தமடைய வைக்க முடியவில்லை.நிறையக் கடமைகள் உண்டு.<BR/>நீங்கள் ரொம்பச் "சைவம்" போல இருக்கிறது.<BR/>நீங்கள் நீடூழி வாழ என் குலதெய்வம் முருகனைப் பிராத்திக்கிறேன்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-63535770490196810282008-03-06T12:21:00.000+01:002008-03-06T12:21:00.000+01:00//அவர் வாழ்ந்த காலத்தில் ஆண்கள் இந்த அளவுக்கு நீண்...//அவர் வாழ்ந்த காலத்தில் ஆண்கள் இந்த அளவுக்கு நீண்ட தாடியை வைத்திருந்திருந்து பார்த்திருக்கவில்லையோ? என்னவோ? பார்த்தால் விட்டிருப்பாரா? //<BR/><BR/>இருக்கலாம். அதுக்காக பெரியார் கண்ணாடியே பார்க்கவில்லை என்று மழுப்பக்கூடாது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-27765732736129504302008-03-06T10:58:00.000+01:002008-03-06T10:58:00.000+01:00கொண்டோடி!என்னை நீங்கள் அதிகம் புகழ்கிறீர்கள்; அதாவ...கொண்டோடி!<BR/>என்னை நீங்கள் அதிகம் புகழ்கிறீர்கள்; அதாவது "தமிழிச்சி;தமிழ்ப்பித்தன்" அளவுக்கு <BR/>தலைப்பில் உயர்ந்துவிட்டேனென; ஆனால் நான் அந்த அளவு; குத்திக்கரணம் அடித்தாலும்<BR/>வரமுடியாது.<BR/>இது என் தாழ்மையான கருத்து.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com