Tuesday, August 08, 2006

வாங்கோ

அன்பு நெஞ்சங்களே!"ஆசை அறுமின்! ஆசை அறுமின் - ஈசனோடாயினும் ஆசையறுமின்!!!யாரை விட்டது ஆசை! எல்லோரும் தமிழ்மணத்தில் சொந்த வீடு கட்டுறாங்களே! நாமும் ஒன்று கட்டினால் என்ன? என்ற ஆசையே இந்த "என் பார்வையில்"!எனக்கு எதையும் வாசிக்கப் பிடிக்கும்;அறிவு தெரிந்த நாளிலிருந்து;என் அறிவுக்கெட்டியவரை வாசிக்கிறேன். அவற்றில் எல்லோரைப் போலும் "என் பார்வை"யும் உண்டு.அதை உங்களுடன் பகிரவே! இந்த "என் பார்வையில்"இது எப்படி? என வந்து தான் பாருங்களேன்.

20 comments:

பொன்ஸ்~~Poorna said...

வாங்க யோகன்... வருக வருக.. உங்கள் படைப்புகளுக்காக காத்திருக்கிறோம்..

மலை நாடனுக்கும் எங்கள் நன்றிகள் :)

வெற்றி said...

யோகனண்ணை,
எழுதுங்கள். படிக்க ஆவலாக உள்ளேன்.

குமரன் (Kumaran) said...

உங்கள் பார்வையில் விதயங்கள் எப்படி இருக்கின்றன என்று தொடர்ந்து தாங்கள் என் பதிவுகளில் இடும் பின்னூட்டங்களில் இருந்து கொஞ்சம் அறிவேன் ஐயா. இனி உங்கள் பதிவுகளிலேயே அதனை அறிந்து கொள்ளலாம். மிக்க மகிழ்ச்சி.

சின்னக்குட்டி said...

வணக்கம்...யோகன்....பதிவு கண்டு மகிழ்ச்சி

துபாய் ராஜா said...

சொந்த வீட்டில் சுபநிகழ்ச்சிகள் பல நிகழ வாழ்த்துக்கள்.

Anonymous said...

பின்னூட்ட மன்னன் யோகன் பாரிஸை வரவேற்கின்றோம்

Chandravathanaa said...

வாங்கோ யோகன்.
வழமையில் பின்னூட்டங்கள் மூலமாகப் பல தகவல்களைப் பரிமாறுவீர்கள்.
இப்போது உங்கள் பதிவிலேயே நிறையத் தகவல்களைத் தாருங்கள்.

துளசி கோபால் said...

நல்வரவு யோகன்.

வந்தாச்சுல்லே? அதுதான் முக்கியம்.

ம்ம்ம்ம்ம்ம்ம்ம். ஆரம்பியுங்கோ.

Santhosh said...

வாங்கோ யோகனுங்கோ எழுதுங்கோ படிக்கிறோமுங்கோ. :))

Jeyapalan said...

வாங்க யோகன். வாழ்த்துக்கள்.

தி. ரா. ச.(T.R.C.) said...

நல்லது. இனிமேல் யோகன் உணர்சிகளை படிக்க தேடவேண்டி மற்ற பதிவுகளுக்கு அலையவேண்டம்.

aaradhana said...

வணக்கம்...யோகன்....

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஆராதனா!
வருகைக்கு நன்றி!
என் மற்றைய ஆக்கங்களைப் படித்து; தங்கள் மேலான கருத்துக் கூறவேண்டுகிறேன். தங்கள் ஆக்கங்கள் படித்த பின் பின்னூட்டுவேன்.
யோகன் பாரிஸ்

VSK said...

வாழ்த்துகள்!

Jay said...

இவளவு அளகாக பின்னூட்டமிடும் இந்த அன்பருக்கு இவ்வளவுநாளும் வலைப்பதிவு இல்லாமல் இருந்ததா??
நம்பவே முடியவில்லை...
ஆரம்பியுங்கள் யோகன்-பாரீஸ்

ரவி said...

கலக்குங்க...வாழ்த்துக்கள்/..

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அன்புடன் வரவேற்ற பொன்ஸ்;வெற்றி,குமரன் ,சின்னக்குட்டி அண்ணர், துபாய் ராசா,"மன்னன் பட்டம் தந்த
அனாமி (வேண்டாமையா! பப்பாசி மரத்தில ஏத்தக் கூடாது) சந்திரவதனா,துளசி அக்கா,சந்தோஸ்;ஜெயபால், திராச ஐயா அனைவருக்கும் நன்றி; இந்த வரவேற்புப் போல் உங்கள் வாசிப்பும்; வாசிக்கிறீர்கள் எனும் சந்தோசமுமே எழுதத் தூண்டும். என் எழுத்தில் சுவையில்லையோ பயன் இல்லையோ கூசாமல் கூறவும். சுவைக்காக ,சுண்டியிழுக்கும் தலைப்புக்காக "குஸ்புவின் சேலை" எனத் தலைப்பு வைக்க இயலாது." கொள்வார் இல்லை எனினும்" இதை நிறுத்தி; வாசகனாகவும்; பின்னூட்டமிடுபவனாகவும்; இருப்பதால் எனக்குக் குறையொன்றுமில்லை. உங்கள் நட்பைத் தொடர்வேன்.
இந்த அளவில் என்னை நிறுத்திய குமரன்; மலைநாடருக்கு என்றும் என் நன்றி!
யோகன் பாரிஸ்

வல்லிசிம்ஹன் said...

வானக்கம், வாழ்த்துகள் யோகன் பாரிஸ்.
மிக்க அன்புடன் பின்னூட்டமிடும் உங்கள் எழுத்துகளைப் படிக்க நிறைய ஆவலாக இருக்கிறது.

திருமதி.ரேவதி நரசிம்ஹன்.

Anu said...

welcome johan paris..:)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ரேவதி நரசிம்மன், அனித்தா பவன்குமார்!
வருகைக்கு நன்றி!
சில பதிவுகள் இட்டுள்ளேன். படித்துப் பார்க்கவும்.
யோகன் பாரிஸ்