Saturday, September 30, 2006

கலைமகள் உவப்பவை!


தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம்
தீமை காட்டி விலக்கிடும் தெய்வம்
உய்வமென்ற கருத்துடை யோர்கள்
உயிரி நுக்குயிராகிய தெய்வம்
செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்
செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்
கைவருந்தி உழைப்பவர் தெய்வம்
கவிஞர் தெய்வம் ;கடவுளர் தெய்வம்.


செந்தமிழ்மணி நாட்டிடை யுள்ளீர்!
சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்!
வந்தனம் இவட் கேசெய்வ தென்றால்
வாழி ய்கிதிங் கெளிதென்று கண்டீர்
மந்திரத்தை முணுமுணுத் தேட்டை
வரிசை யாக அடுக்கி அதன் மேல்
சந்த னத்தை மலரை இடுவோர்
சாத்திரம் இவள் பூசனை யன்றாம்.



வீடு தோறும் கலையின் விளக்கம்!
வீதி தோறும் இரண்டொரு பள்ளி!
நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள்
நகர்கள் ளெங்கும் பலபல பள்ளி!
தேடு கல்வியிலாததொ ரூரைத்
தீயினுக்கிரை யாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை!
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்.

No comments: