Wednesday, October 17, 2007

பாரிசில் தியாகராஜர் விழா...காணொளியாக



பிரான்சில் சங்கீத மும்மூர்த்திகளில் முதல்வர் ' சற்குரு தியாகராஜ சுவாமிகளின்'

ஆராதனை விழா ஒக்கோபர் 13, 14 ம் திகதிகளில், 6 வது தடவையாக, பாரிஸ் அலியன் பிரான்சே மண்டபத்தில் வெகுசிறப்பாக தென்னகக் கலைஞர்கள் பலரின் இசை விருந்துடன்
நடந்தேறியது.

அங்கே நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளின் சிறு பகுதியை ,காணொளியாக தரவுள்ளேன்.
வெளிச்சம் அதிகம் இல்லாததால் காட்சி சுமாரே, ஆனால் இசை ஓரளவு கேட்கும் படி உள்ளது.


கர்நாடக இசை வளர்ச்சி நிறுவனத்(MADHURYA) தலைவர் Michel ROLLOT


இந்தியத் தூதர் திரு ரஞ்சன் மார்தா


நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்களுடன் விழா அமைப்பாளர் ஆனந்தி (Anandi ROY)





முக்கிய கலைஞர்கள் வீணை மேதை திரு.திருவனந்தரம் வெங்கட்ராமன், வயலின் மேதை திரு. ரி.என். கிருஸ்ணன், பாட்டு மேதை திருமதி வேதவல்லி, வயலின் மேதை விஜி கிருஸ்ணன் (திரு. ரி.என்.கிருஸ்ணன் மகள்)






இவ்வருட விழாவில்...
தென்னகத்தில் இருந்து வயலின் மாமேதை பத்ம பூசண் ரி.என். கிருஸ்ணன்
வயலின் மேதை விஜி கிருஸ்ணன்
வாய்ப்பாட்டு மேதை திருமதி வேதவல்லி
வீணை மேதை திருவனந்தரம் வெங்கட்ராமன்
வாய்ப்பட்டு மேதை சுகந்தா காளமேகம்
வாய்ப்பாட்டு வித்துவான் சுமதி கிருஸ்ணன்

புல்லாங்குழல் மேதை ரி.ஆர்.மூர்த்தி
வீணை வித்தகி ஆர்.சுப்புலக்சுமி அம்மாள்

ஆகியோருக்கு பக்க வாத்தியமாக

மிருதங்க வித்துவான் காரைக்குடி கிருஸ்ணமூர்த்தி


மிருதங்க வித்துவான் திருவனந்தரம் வி.சுரேந்திரன்


வயலின் வித்தகி சாருலதா ராமானுஜம்


கடம் வித்துவான் வைக்கம் கோபாலகிருஸ்ணன்
ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.





ஆரம்ப நாள் நிகழ்சியாக சுகந்தா காளமேகம் பாடுகிறார்.
அவருடன் மதுரியா மாணவர்களும் உடன் பாடினார்கள்.




சங்கீத கலாநிதி வேதவல்லி அம்மாள் பாடுகிறார். அவர் 80 வயதை எட்டுகிறார்.


மிகுந்த லகிப்புடன் பாடி மகிழ்வித்தார்.இவருக்குப் பக்கவாத்தியம் வயலின் சாருலதா


ராமானுஜம் மிகச் சிறப்பாக வாசித்து ரசிகர்களை மகிழ்வித்தார். வயது சொற்பம்,ஆற்றல்


மெச்சத் தக்கது.



சங்கீத கலாநிதி ரி.என். கிருஸ்ணன் அவர்கள் வயலின் கச்சேரியில் ஒரு சிறு


பகுதி , அவர் மகள் விஜி அவர்களும் உடன் வாசித்தார்கள். பக்கவாத்தியமாக


காரைக்குடி கிருஸ்ணமூர்த்தி-மிருதங்கம், வைக்கம் கோபாலகிருஸ்ணன் -கடமும்


வாசித்துச் சிறப்பித்தார்கள். இந்த 80 வயது இளைஞர் மிகத் துடிப்புடன் வாசித்தார்.





சாதாரணமாக மிகக் குறைவான வெளிச்சமே ரசிகர் மேல் படவிடுவது இங்கே வழமை


இவரோ!!! நான் என் ரசிகர் முகங்களில் என் இசை ஏற்படுத்தும் மாற்றங்களைத் காண விரும்புகிறேன். தயவு செய்து வெளிச்சத்தைப் போடுங்கள் எனக் கேட்டு எல்லோர்


முகத்தையும் பார்த்துப் பரவசத்துடன் வாசித்தார். 2 மணி நேரம் மெய்மறக்க வைத்தார்.





பிரன்சு இரசிகர்கள் எழுந்து நின்று கரகோசம் செய்து, கௌரவித்தனர்.( இங்கு மிகப் பிடித்தால் எழுந்து பல நிமிட நேரம் கரகோசம் செய்வது வழமை)






ரி.என்.கிருஸ்ணன் வயலின் இசையின் மேலும் சிறு பகுதி






கலைஞர்கள் அனைவரும் பஞ்சரத்ன கீர்த்தனை பாடுகிறார்கள்.

இந்த நிகழ்ச்சிகள் யாவும் மிக நேர்த்தியாக ஒழுங்குசெய்த மதுரியா அங்கத்தவர்கள்அனைவரும் பாராட்டுக்குரியோர். குறிப்பாக திருமதி ஆனந்தி ரோய் மிகப் போற்றுதலுக்குரியவர்.




பொதுவாக மிக அமைதியாக நடக்கும் நிகழ்ச்சிகளை 'ஊசி போட்டால் சத்தம் கேட்டும்' எனக் கூறுவது வழமை...இந்த இருநாள் நிகழ்ச்சியிலும் கலைஞர்கள் நிகழ்ச்சி நடந்த போது, இறகு விழுந்தால் சத்தம் கேட்டிருக்கும், அப்படி ஒரு அமைதி.




சுமார் 150 பேர் இதில் விரல் விட்டு எண்ணக்கூடிய இந்திய,ஈழ ரசிகர்கள்...ஏனையோர்

அனைவருமே நம் இசையால் கவரப்பட்ட பிரான்சியர்கள்.. இசையை ரசிப்பதை அவர்களிடம்

பாடமெடுக்க வேண்டும்.

கலைஞர்கள் கூட அவர்கள், ஒன்றி ரசித்ததை வெகுவாகக் குறிப்பிட்டார்கள்.

இடைவேளையில் சுவையான சிற்றுண்டியும் மதுரியா வழங்கியது.




அன்றைய இரு தினமும்,மிக அருமையான வாரவிறுதியாக அமைந்தது.

Tuesday, October 16, 2007

புறா நீரருந்துவதைப் பாருங்கள்!




பறவை இனங்களில் நீரை உறுஞ்சிக் குடிப்பது புறா...(வேறு இருந்தால் கூறவும் )
அத்துடன் புறா பறவையினத்தில்
தன் அளவுக்கு அதிக நீரைக் குடிக்கும் பறவை எனவும் படித்துள்ளேன்.
இதோ அந்தக் காட்சி.....


Friday, October 12, 2007

பாம்பும் நீர் குடிக்கும்...பாருங்கள்

வவ்வால் தன் 'சில கேள்விகளும் பதில்களும்' எனும் பதிவில், பாம்பு நீர் குடிப்பதில்லை ,அதன் பிளவு பட்ட நாக்கு பொருந்தாது என எழுதியிருந்தார்.

ஆனால் நான் பார்த்த தொலைக்காட்சி விபரணச் சித்திரத்தில் ,ஆபிரிக்காவில் ஆற்றோரம் பாம்பு நீரருந்தியது, நினைவில் வந்தது. அதை அவருக்குப் பின்னூட்டமாகப் போட்டபின் யூரியூப்பில் தேடிய போது இவை கிடைத்தது.

இவை வளர்ப்புப் பாம்புகள் ஆனால் இயற்கைச் சூழலில் வாழும் பல இனப் பாம்புகள் நீரருந்துகின்றன.

தயவு செய்து இயற்கையில் வாழும் பாம்பு ,எப்படி நீர் அருந்துகிறதென இங்கே

பார்க்கவும்.

http://www.youtube.com/watch?v=YVYFP9SjIQs










Tuesday, October 09, 2007

பாரிசில் தியாகராஜர் ஆராதனை

இசை மும்மூர்த்திகளில் மூத்த சற்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின்
ஆராதனையை, 6 வது தடவையாக ,எதிர் வரும் 13, 14 ஒக்டோபர் 2007 , வாரவுறுதியில் பாரிஸ் அலியன் பிரான்சே மண்டபத்தில் ,
பாரிசில் கர்நாடக இசைக்கான நிறுவனமான மதுறியா (MADHURYA) ஒழுங்கு செய்துள்ளது.

தென்னகத்தில் இருந்து வயலின் மாமேதை ரி.என்.கிருஸ்ணன் , இசை மேதை வேதவல்லி உட்படப் பல கலைஞர்கள் கலந்து
சிறப்பு இசை நிகழ்ச்சி தரவுள்ளார்கள்.




Samedi 13 octobre 2007
16h : Ouverture du festival
16h30 : Concert de chant par Sugandha Kalamegham
17h50 : Concert de vina par R. Subbalekshmi Ammal
18h50 : Entracte
19h20 : Concert de flûte par TR Moorthy
20h30 : Concert de chant par Sangitha Kalanidhi R. Vedavalli
22h15 : Fin de la première journée

Dimanche 14 octobre 2007
13h55 : Ouverture
14h00 : Concert de vina par Trivandrum R. Venkataraman
15h45 : Entracte
16h15 : Concert de violon par Padma Bhushan Sangitha Kalanidhi TN Krishnan
18h05 : Récitation des Pancharatna kritis par tous les musiciens
19h15 : Clôture du 6ème Festival Tyagaraja

நுளைவுக் கட்டணமாக நாளொன்றுக்கு 18 யூரோக்கள் .


நல்ல இசை நுகர அரிய சந்தர்ப்பம்.


மேலதிக விபரங்களுக்கு இங்கே

சொடுக்கவும்.

பிரான்சியருக்கும் பௌதீகத் துறை நோபல் பரிசு


Mr.Albert FERT- FRANCE




Mr. Peter GRUNBERG - Germany

ன்று அறிவித்த பௌதீகவியலுக்கான நோபல் பரிசுக்காக பிரான்சைச் சேர்ந்த விஞ்ஞானி திரு அல்பேட் பேர், ஜேர்மனியைச் சேர்ந்த திரு. பீட்டர் குறுண்பேர்க்
ஆகிய இருவரும் தெரிவாகியுள்ளார்கள் .
இவர்கள் இருவரும் கணனிக்கு உபயோகிக்கும் சேமிப்பு தகடு (hard disk)
பற்றிய துறையில் மிக பயனுள்ள அதிகம் சேமிக்கக் கூடிய ,கண்டுபிடிப் பொன்றைச் செய்துள்ளதற்காக ,இது வழங்கப்பட உள்ளது.
இது என்ன உபகரணம், இதன் சிறப்புப் பற்றி கணனித் துறையில் கைதேர்ந்த
சக பதிவர்கள்...எமக்கு எளிமைப் படுத்தி கூறுவார்கள் என நம்புகிறேன்.
இருவரையும் வாழ்த்துவோம்.

Sunday, October 07, 2007

ஹரிவராசனம் விச்வ மோகனம்.....





தெய்வீக நம்பிக்கையுள்ளவர்கள் ,நல்ல இசையை நுகர்வோர்,ஜேசுதாசின் இன்குரலின் மையல் கொண்டோர் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.


ஹரிவராசனம் விச்வ மோகனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்ய பாதுகம்
அரிவிமர்த்தனம் நித்ய நர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாச்ரயே
சரணகீர்த்தனம் பக்தமானஸம்
பரண லோலுபம் நர்தனாலஸம்
அருண பாஸுரம் பூத நாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாச்ரயே
கள ம்ருதுஸ்மிதம் சுந்தரானனம்
களப கோமளம் காத்ர மோகனம்
களப கேசரி வாஜிவாகனம்
ஹரிஹராத்மஜம் தேவமாச்ரயே
ச்ருத ஜன ப்ரியம் சிந்திதப்ரதம்
ச்ருதி விபூஷணம் சாது ஜீவனம்
ச்ருதி மனோகரம் கீதலானஸம்
ஹரிஹராத்மஜம் தேவமாச்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா!


உயர்ந்ததும் தங்கமயமானதுமான பொன்னம்பல மேட்டில் எழுந்தருளியிரிப்பவர்!
உலகையே மயக்கச் செய்பவர்!
பூசிக்கத் தகுந்த திருவடிகளைக் கொண்டவர்!
பகைவர்களை நாசம் செய்பவர்!
பக்தர்கள் தங்கள் உள்ளத்தில் வைத்துத் துதி பாடு சரணங்களை உடையவர்!
அறியாமையை நீக்கி அருளாடச் செய்பவர்!
சூரியன் போல் பிரகாசிப்பவர்!
பஞ்சபூதங்களுக்குத் தலைவர்!
இனிமையான பேச்சு உடையவர்!
மென்மையான புன்சிரிப்புக் கொண்டவர்!
களபச் சாந்து பூசிய திருமேனியர்!
அழகான கழுத்தும் உறுதியான உடலும் கொண்டவர்!
சிங்கத்தின் பிடரியைப் போன்று பின் கழுத்துவரையும் தவழும் தலைமுடியைக் கொண்டவர்!
சரங்குத்தியி அருள்பவர் சாஸ்தா!
சாஸ்திர வல்லுனர்களுக்குப் பிரியமானவர்!
எண்ணியதை முடித்து வைப்பதில் முதல்வர்!
வேதங்களையே ஆபரணமாகக் கொண்டவர்!
நல்லவர்களைக் காப்பாற்றுவதற்காக இருப்பவர்!
அழகான காதுகளைக் கொண்டவர்!
சரண கோஷத்தில் விருப்பம் உள்ளவர்!
தேவர்களால் துதிக்கப்படும் அப்படிப்பட்ட ஹரிஹரசுதனைத் துதிக்கிறேன்.

*** நன்றி:சக்திவிகடன் டிசம்பர் 2004


யூ ரூபில் இட்ட shankermcsa


''கற்பனையென்றாலும் கற்சிலை என்றாலும் மறவேன்'

Saturday, October 06, 2007

பிரான்ஸ் கம்பன் விழா....

டந்த செப்டம்பர் மாதம் 29, 30 திகதிகளில் ,பாரிசின்
புறநகர்ப் பகுதியான லா கூர்னோவில், பிரான்ஸ்
கம்பன் கழகத்தின், 6 ம் ஆண்டு விழா வெகு விமரிசையாக
நடைபெற்றது.

சிறப்புப் பேச்சாளராக அருட் சொற்ச் செல்வர் திருமிகு சுகி சிவம் அவர்கள்
கலந்து, தன் திறன் மிகு பேச்சால் பார்வையாளர்களைக் கவர்ந்தார்.
இந்த எழில் உற்ற விழாவைக் காணும் பேறு இவ்வருடம் நான் பெற்றேன்.

அதை உங்களுடன் பகிர என் குட்டி NIKON ஆல் காணொளியாகப் படமாக்கினேன். இது என் கன்னி முயற்சி, அதனால் இதில் உள்ள குறைகளைப் பொறுக்க வேண்டும்.

முதற் காட்சி... மலர் வெளியீடு ,இதில் நமது சக பதிவர் திரு மாசிலா மணி
(நாளை நமதே- மாசிலா ) அவர்களையும் மேடையில் பெயர் கூப்பிட்டழைத்து
மலர் வழங்குகினார்கள்.



பட்டிமன்றத் தலைப்பாக 'கம்பனைக் கவிச்சக்கரவர்த்தியாக்கியது

பாத்திறமா? பாத்திரமா?' இடம் பெற்றது அதில் ஒரு பகுதியான மரபின் மைந்தர் வே .முத்தையா, நகைச்சுவைத் தென்றல் இரெ. சண்முகவடிவேல் பேசியதில் சிறு பகுதிகள் சேர்த்துள்ளேன்.





இந்த இரண்டாம் நாள் நிகழ்சிகளில் பாரிசில் இசைகற்கும்

பிள்ளைகள் பங்கேற்றார்கள்.நடன நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.

வழக்காடு மன்றத்தில் ' குற்றவாளிக் கூட்டில் தமிழைப் பேணாத தமிழர்கள்

எனும் தலைப்பில் மரபின் மைந்தர் வே.முத்தையா. நகைச்சுவைத் தென்றல்

இரெ. சண்முகவடிவேல் , சுகி.சிவம் நடுவராகப் பங்கேற்றார்.(தமிழகத்தில் இருந்து வந்திருந்தார்கள்)

தமிழகத்தில் தமிழின் இன்றைய நிலையை நகைச்சுவையுடன் அழகாகச் சுட்டிக்காட்டினார்கள்.

சுகி சிவம் அவர்கள்' தமிழக தமிழ்த் தொலைக்காட்சியில் செய்தி தவிர தமிழ் வாக்கியங்களை முறிக்காத நிகழ்ச்சியே இல்லை எனக் கூறினார்.



இனிதே சிறப்புற நடந்த விழாவில் இரண்டாம் நாள் மண்டபம் நிறைந்தது.

இலக்கிய விழாவுக்கு மண்டம் நிறைந்தது, மகிழ்வே!!

இரு நாளும் காலை முதல் நடந்த விழாவை தடையின்றிக்காண ,அன்பர்களுக்கு உணவு,குளிர்பானம் கொடுத்து அனுசரித்தார்கள்.

இந்த விழாவை சிறப்புற நடத்திய பிரான்ஸ் கம்பன் கழகமும், அதன் தாய்க் கழகமான புதுவைக் கம்பன் கழகமும் எவ்வளவும் பாராட்டத் தகும்.

குறிப்பாக பிரான்ஸ் கம்பன் கழகத் தலைவர் பாவலர் பாரதிதாசன் மிகப் போற்றுதலுக்குரியவர்.

குறிப்பாக என் மனதைக் கவர்ந்தது. சகபதிவர் திரு மாசிலாமணி அவர்களை

மேடையில் அழைத்துக் கௌரவித்தது. அவர் ஆத்மீகத்தை இகழ்பவராக இருந்தாலும், தமிழரின் சீரிய வாழ்வு பற்றிய சிறந்த சிந்தனையுடையவர் என்பதால் இந்தச் சிறப்பைச் செய்தார்களோ தெரியவில்லை.

ஆனால் நல் ஆத்மீக வாதிகளின் சிறப்பே ' இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.' அதைச் செய்து ஆத்மீகத்தைப் பெருமைப் படுத்திய அன்பர்களுக்கு நன்றி!!

பதிவர் மாசிலா மணி அருகில் அமர்ந்தும் ,அவரைச் சரியாக அடையாளம் கண்டும், அவருக்கு நான் யாரெனத் தெரியப்படுத்தவில்லை. காரணம் அவர் கோட் சூட் என பக்காவாக உடுத்திருந்தார்.

நானோ பஞ்சத்தில் அடிபட்ட பரதேசிபோல் இருந்தேன். (நான் ஒரு அகதித் தமிழன் தானே, பிரான்ஸ் ஆமியில் இருந்த தமிழன் பிள்ளையில்லையே)அவருக்குச் சங்கடமாக இருக்கக் கூடாது. என்பதால் தவிர்த்தேன். பலர் இப்படிப் பொது இடங்களில் என்னைத் தவிர்த்துள்ளார்கள்.

இத்தனைக்கும் நான் மாசிலா அவர்கள் பதிவைப் பார்த்துவிட்டே புறப்பட்டேன்.

இப்படி ஓர் இனிய வாழ்நாளில் மறக்கமுடியாத அறிஞர்கள் பேச்சை நேரடியாகக் கேட்கும் அனுபவத்தை ஏற்படுத்திய அனைவருக்கும் மிக்க

நன்றி!

கடைசித் தமிழன் இருக்கும் வரை கம்பன் நாமம் வாழும்!!

அதை எந்தக் கொம்பனாலும் தவிர்க்கமுடியாது.

கன்னித் தமிழ் வாழ்க ! கம்பன் நாமம் வாழ்க!!