Monday, April 28, 2008

கமல் பதிவுக்கு வந்த பின்னூட்டங்களுக்கு என் பதில்!!!


அனைவருக்கும் நன்றி!
என் கமல் பற்றிய பதிவுக்கு வந்த பின்னூட்டங்களுக்கு வெகு சிரமமில்லாமல் இரண்டே மறுபின்னூட்டம் இட்டால் போதும் என்ற நிலை.
அந்த இரண்டுக்குமே வெகுகாலம் எடுத்ததன் காரணம்.
பதட்டமடைய ஏதுமில்லை!
அத்துடன் சிலராவது பின்னூட்டினேனே இவனென்ன சொல்லப்போகிறானென
ஒரு த‌ட‌வையாவ‌து வ‌ந்து பார்த்திருப்பார்க‌ள்.
என் ப‌க்க‌ம் எந்த‌ எதிர்வினை கூட‌ இல்லாத‌து அவ‌ர்க‌ளுக்கு ம‌கிழ்வைத் த‌ந்திருக்க‌லாம்.
அந்த‌ அற்ப‌ ச‌ந்தோச‌த்தைக் கெடுக்க‌ ம‌ன‌ம் வ‌ர‌வில்லை. சிலர் பின்னூட்டம் அப்படியானது.
உங்க‌ள் க‌வ‌ன‌த்துக்கு! உங்க‌ள் சில‌ர‌து க‌ருத்துக்கு என் க‌ருத்து எதிரான‌தே த‌விர‌;
நான் உங்க‌ள் எதிரிய‌ல்ல‌!!
இந்த‌க் கால‌க் க‌ட்ட‌த்தில் நேர‌ம் கிடைத்த‌ போது அகில‌ உல‌க‌ப் பிர‌ப‌ல‌ங்க‌ளின்
குடும்ப‌ப் ப‌ட‌ங்க‌ளை இணைய‌த்தில் தேடினேன்.
என் பார்வையிலோ;நோக்க‌த்திலோ த‌வ‌று இல்லை என்ப‌தைப் புரிந்தேன்.
குறிப்பாக‌ ந‌ம‌து திரையுல‌க‌ ர‌ஜ‌னி;சிவ‌குமார்; எஸ்.வி.சேக‌ர் போன்றோரின்
ம‌க‌ள்மாரின் திரும‌ண‌ப் புகைப்ப‌ட‌த் தொகுப்புக்களையும் பார்த்தேன்.
யாவும் என் எண்ண‌த்துக்கு வ‌லுச் சேர்த்த‌து.
ஒருவ‌ர் கேட்டிருக்கிறார்..."உண்மையில் நீங்க‌ள் பாரிசில் தானா? இருக்கிறீர்க‌ள்"
அவ‌ருக்கு ..பாரிசில் எல்லோரும் அவுத்துப் போட்டுத் திரிவ‌தாக‌ ;நீங்க‌ள்
அறிந்திருப்ப‌தே...என‌க்குப் ப‌ரிதாப‌மாக‌ உள்ள‌து.
இங்கும் சில‌ பிரான்சிய‌ர்க‌ள் இந்தியா(எங்க‌ளையும் அப்ப‌டியே நினைக்கிறார்க‌ள்)
ப‌திவிர‌தைக‌ளையும்;ஸ்ரீ ராம‌ர்க‌ளையுமே கொண்ட‌ நாடு என‌ எண்ணுவ‌து போல்
உள்ள‌து.
சில‌ர் என்னைக் கரிந்துள்ளார்க‌ள்...நீ அப்ப‌டி அத‌னால் தான் அப்ப‌டி நினைக்கிறாய்...
ப‌ரிதாப‌ப்ப‌டுகிறேன், இவ‌ர்க‌ளையிட்டு!; இது கூட‌ ஒரு வ‌கைத் த‌ப்புத‌லே!
ஆனால் முதியோர்க‌ள்;ஆசிரிய‌ர்க‌ள்;வைத்திய‌ர்க‌ள் த‌வ‌றுக‌ளையும்;நோய்க‌ளையும் சுட்டிக்காட்டுகிறார்க‌ள். அத‌ற்காக‌ அவ‌ர்க‌ளை எவ‌ருமே அப்ப‌டிப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் என‌ எண்ணுவ‌தில்லை.
ஆடையே உடுத்தாத‌வர்கள் ஊருக்குச் சென்று ஆடையுட‌ன் நின்ற‌வன் க‌தியே என் க‌தி!!
ந‌ம்ம‌க்க‌ள் எதையுமே இலகுவாக‌‌ எடுக்கும் "இய‌ல்பாக்க‌ம்" அடைந்துவிட்டார்க‌ள்.
ச‌கோத‌ரி மீனா அருணுக்கு!.. நீங்க‌ள் குறிப்பிட்ட‌ த‌ள‌ம் சென்று பார்த்தேன்.க‌ண்ணிய‌ம் மிக்கோர்; க‌ண்ணிய‌ம‌ற்ற‌ ப‌குதிக‌ளை நீக்கி ஒரு ப‌ட‌ம் போட்டுள்ளார்க‌ள். நீங்க‌ளும் அதைக் க‌வ‌னித்திருக்க‌லாம்.
"க‌ம‌ல் த‌மிழ்நாட்டில் பிற‌ந்த‌ வெள்ளைக்கார‌ன்"....எதால் சிரிப்ப‌தென‌வே தெரிய‌வில்லை. நாங்க‌ள் இப்ப‌டிப் பெருமைப்ப‌ட‌லாம்.ஆனால் "முக்காலும் காக‌ம்
முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா??" என்ப‌தே உண்மை நிலை.
டொண்டு அண்ணாவின் ப‌ட‌ப்பிடிப்புத் த‌ள‌ச் செய்தி என‌க்குப் புதிது; குறிப்பாக‌
ந‌ம் ப‌ட‌ப்பிடிப்புக‌ளில் ந‌ட‌ந்த‌தாக‌க் கூற‌ப்ப‌டும் ப‌ல‌ செய்திக‌ள் துதி பாட‌லும்; முதுகு சொறித‌லும் அட‌ங்கிய‌ பேனைப் பெருமாளாக்கும் விடயமாகவே இருக்கும்.
உதார‌ண‌த்துக்கு " அக்காட்சியைப் ப‌ட‌மாக்கும் போது நாய‌கியின் சோக‌ ந‌டிப்பில்
முழுக் குழுவுமே ம‌ன‌ம் க‌சிந்து விட்ட‌ க‌ண்ணீரில் மொத்த‌ச் சென்னையும் க‌ண்ணீர்
வெள்ள‌த்தில் மித‌ந்த‌து" இந்த‌ மாதிரி எழுதுவ‌தும் பேட்டியில் கூறுவ‌துமாக‌வே எந்த‌ வெட்க‌மோ, கூச்சமோ இல்லாம‌ல் இந்த‌த் திரைத் துறை சொன்ன‌ பொய்க‌ளால்; தெளிந்து நான் இவ‌ற்றைக் க‌ண‌க்கில் எடுப்ப‌தேயில்லை ப‌ல‌ரைப் போல்.
தேடுத‌ல் செய்த‌ போது Hamara Photos எனும் த‌ள‌ம் இந்த‌ 1 ம் ப‌ட‌ம் த‌விர‌ ப‌ல‌ ப‌ட‌ங்க‌ள் இட்டுள்ள‌து. அவ‌ர்க‌ளுக்கும் அதை இடுவ‌து,அவர்கள் தளத்துக்குக் க‌ண்ணிய‌க் குறைவு என‌த் தோன்றிய‌தோ??!!.
அத்துட‌ன் நாமும் மீரா நாயரின் Monsoon Wedding; Water; 09‍- 04 -‍ 2008
யூனிய‌ர் விக‌ட‌ன் "ச‌ட்டையைக் க‌ழ‌ட்டு டான்ஸ் ஆடு" போன்ற‌ அதிர்ச்சிக‌ளைப்
ப‌டிக்க‌ வேண்டியுள்ள‌தால் த‌விர்க்க‌க் கூடிய‌வ‌ற்றைத் த‌விர்த்த‌லே சால‌ச் சிற‌ந்த‌து.
இன்னுமொரு அன்ப‌ர் பெண்க‌ளை அத‌ட்டி மிர‌ட்டுவ‌து ப‌ற்றிக் கூறியிருந்தார்.
இவ்வ‌ள‌வு புர‌ட்சி பேசும் அவ‌ரால் இன்று ப‌ல‌ ஆண்க‌ள் முன்னிர‌வு
சின்ன‌ வீட்டிலும்; பின்னிர‌வைப் பெரிய‌ வீட்டிலும் க‌ழிக்கிறார்க‌ளே!! இத்த‌னை
சிந்த‌னைத் தெளிவும்; விடுத‌லை எண்ண‌மும் வ‌ந்தும் ஏன் இன்னும் சில‌
பெண்க‌ளாவ‌து;இப்ப‌டி வெளிப்ப‌டையாக‌ இர‌ட்டை வாழ்க்கை ந‌ட‌த்த‌ முடிய‌
வில்லை.ஆண்க‌ள் அள‌வுக்கு விவாக‌ர‌த்து செய்து புது உற‌வை உட‌னுக்குட‌ன்
மாற்ற‌வில்லை. இப்ப‌டியெல்லாம் வாழ‌லாம் என்கிறீர்க‌ளா??
பாலசந்தரின் அரங்கேற்ற நாயகி கூறியதுபோல் "ஆணென்பதே மரத்துப் போச்சு" என நம் பிள்ளைகள் கூறுமளவுக்கு எவ்வளவு வசதி; புகழ் இருப்பினும் வாழ விடுவது தவறென்பதே என் அபிப்பிராயம். ஆண்பிள்ளைகளானாலும்
கமலுக்கும் பிடித்த கண்ணதாசன் கூறினார்....ஆடைகள் ஆணுக்கோ பெண்ணுக்கோ கைகூப்பக் கூடிய வகையில் கண்ணியம் காக்கப்படவேண்டும்.
நீங்கள் நமிதாவுக்கும்,ரகசியாவுக்கும் அரைக்கால் மீட்டர் அரியல் துணியைச் சுற்றிவிட்டு ஆடுவோரிடம், இதை எதிர்பார்க்கக் கூடாதென்கிறீர்களா??
தந்தை எனும் வகையில் உடையில் ஓரளவாவது கண்ணியத்தையும் காக்கவேண்டுமென பெற்ற பெண்ணுக்கு (அது ஆணானாலும்) கற்றுத் தரவேண்டியது இவர் கடனல்லவா???
மனநோயாளிப் பெண்ணானாலும் மாராப்புச் சரியவிடார்கள் எம்மக்கள்..
அந்தப் பக்குவமும் கண்ணியமும் எங்கே போனது....
அது ஒரு விபச்சாரியே கூச்சப்படும் ஆடை....இதை நாகரீகம் எனலாம் நீங்கள்...இதா?? நாகரீகம்.
Sunday is longer than Monday இது பற்றி நான் இந்த இடத்தில் சொல்லியே ஆக வேண்டும். நடந்த விடயம்...ஒரு பாடசாலையில் ஒரு மாணவனும் மாணவியும் பேசுக்கொண்டிடுக்கிறார்கள். வகுப்புள் இருந்த அவள் தோழி.. எழுந்து வந்து அவர்கள் இருவரையும் கடந்து செல்லும் போது கூறிச் சென்ற ஆங்கில வசனமே!! மேற்குறிப்பிட்டது.அதை அந்தப் பெண்கூறிச் சென்ற சில வினாடிகளில் ;பேசிக் கொண்டு நின்ற மாணவி தன் ஆடையைச் சரி செய்தாள். அதே நேரம் அவள் முகத்தில் சிறு கலவரம்...மாணவனுக்கு ஏதுமே புரியவில்லை.வீடு வந்த மாணவன்,தன் சகோதரியிடம் ...அடுத்த பெண் கூறிய ஆங்கில வாக்கியம் பற்றிக் கேட்டேன். தங்கையோ அது ஒன்றுமில்லை என்றாள்.ஆனாலும் அவனுக்கு இதுக்குள் ஏதோ இருக்கு எனத் தோன்றியதால்,மீண்டும் கேட்டபோது , தங்கை கூறியது.இது ஒரு குறியீட்டு மொழி..
தங்கள் உடை பிசகியிருக்கும் போது,அடுத்தவர் முன் அந்த அடுத்தவருக்குப் புரியா வண்ணம் கூறுவதற்கு இதைப் பாவிக்கிறோம். தன் தோழியின் உள்பாவாடை,பாவாடைக்கு வெளியே தெரிந்துள்ளதை சூக்குமமாக தன் தோழிக்குத் தெரியப்படுத்த இந்த சங்கேத மொழி...அதாவது உள்பாவடையை அடுத்தவர் பார்த்திரக்கூடாதெனும் பக்குவம். அத்துடன் அப்படி ஒரு சம்பவம் நடந்ததை அருகில் உள்ள ஆண் தெரிவதைப் பெண்கள் விரும்பவில்லை.
ஆனால் உள்பாவாடையே எங்களுக்கு உடையென்கிறீர்கள்.
ஆனந்த விகடனில் (23-04-2008) ஜெயகாந்தன் கூறியிருந்ததை நினைவு படுத்துகிறேன்.
//பொதுவா, அந்த மாற்றங்கள் பெண்கள் மத்தியில்தான் நிகழும் என்று நினைத்தேன். ஆனால், அது இவ்வளவு விபரீதமாக மாறும் என்று நினைக்கவில்லை'' என்ற ஜெயகாந்தன், சில விநாடிகளுக்குப் பிறகு அமைதியைக் கிழிக்கிறார்.
''' 'ஏம்மா மாராப்பு போட லை?'னு கேட்டுப் பாருங்க. 'எதுக்குத் தொடையைக் காட்டுறே?'ன்னு கேட்டுப் பாருங்க. 'என் தொடை... நான் காட்டுறேன்'னு பதில் வரும்.
ஏழ்மையின் காரணமாக, வீடு இல்லாத ஒரு குடும்பம் பனகல் பார்க் பிளாட்ஃபாரத்தில் குடும்பம் நடத்தி, வெட்டவெளியில் ஆசையில் கூடி, எதிர்காலச் சந்ததிக்கு அவள் வயிற்றில் விதை போட்டான்னு முன்ன ஒருசமயம் எழுதியிருந்தேன். இப்போ என்ன நடக்குது... எல்லா வசதியும் இருக்கிறவன் அதையே வீதியில் காருக்குள்ள பண்றான்.
நான் நினைத்த மாற்றம் இதுவா?'' என்கிறார் வருத்தம் சொட்டும் குரலில்.//
உடுக்கவில்லாது அரைகுறையாக உடுத்துவது வேறு, எல்லாம் இருந்தும் அலங்கோலமாக நிற்பது வேறு...
மாட்டுக்கு மாடு சொன்னால் கேளாது மணி கட்டின மாடு சொல்ல வேண்டு மென்பாங்க..
கமல், கௌதமி தத்தமது பிள்ளைகளுடன் முதல் ஒரு பொது நிகழ்வில் கலந்து கொண்ட போது ஆனந்த விகடன் நிருபர் இவர்களைப் பேட்டி கண்ட போது, கமலின் மகளின் யீன்ஸ் நழுவி விழுந்துடுமோ??(அந்த அளவு இறக்கம்) எனும் அச்சத்துடன் இருந்தேன். எனப் படத்துடன் அவ்வுடுப்புப் பற்றி கோடிட்டுக் காட்டியிருந்தார்.
ஆனால் அவர்கள் பிறருக்காக வாழும் குடும்பமல்ல! தமக்காக வாழும் குடும்பமாம்...இது நடைமுறைக்கு ஒவ்வுமா??
வாரியாரோ, சு.கி.சிவமோ, தமிழருவி மணியனோ கூறியதாக ஞாபகம் 'பெற்ற பெண்ணானாலும் குறிப்பிட்ட வயதுக்குப் பின் அவர்களைத் தொடுவதில் கண்ணியம் இருக்க வேண்டும்'

சொந்த அக்காவை (நடிகை) விபச்சாரத்துக்குக் கூட்டிவந்து விடுதியில் கொரிய கார் நிறுவன இயக்குனருக்கு விட்டு விட்டு; லட்சக்கணக்கில் காசை வாங்கி வெளியே காவலுக்கு நின்ற தம்பியையும் படித்திருப்பீர்கள்.
கணவனைப் பிரிந்து கைக்குழந்தையுடன் வாழ்ந்த பெண்ணை மணம் முடிக்கிறான் ஒருவன்;அவனுக்கும் அவளுக்கும் பிள்ளைகளும் பிறக்கின்றன.முதற் கணவனுக்குப் பிறந்த‌ பிள்ளைக்கு 13 வயதாகிறது. அவன் தன் மனைவியை ஆய்கினைப் படுத்துகிறான். அந்த முதற்கணவனுக்குப் பிறந்த பெண்ணைப் பெண்டாட..இதைச் சகிக்காத தாய்.. இரவு ப‌டுக்கையில் அம்மிக் குழவியால் தலையில் அடித்து தன் கணவனையே கொன்று விட்டு போலிசுக்கு நேரே போகிறாள். அவன் பெற்ற பெண்ணுக்கும் ஆதரவு அவன் பெண்டாட நினைத்தபெண்...படித்திருப்பீர்கள்..
மகளே!! நீ நல்லாயிரு!!என கையைத் தலையில் வைத்து ஆசி வழங்கிய துறவிகள் எனக் கூறப்பட்டவர்களும், தந்தையே! எனக் காலில் மண்டியிட்ட பெண்ணைத் தன் குழந்தைக்குத் தாயாக்கிய மதகுருமார்களும் சந்தேகக் கூண்டில் சிக்கியதை நாம் அறிவோம்.
வசந்தனுக்கு!..
நீங்கள் நினைப்பது போல்;அப்படி எதுவும் நடக்கவில்லை.
இப்படி நான் நடக்கவுமில்லை; காணவுமில்லை என்பதே கூறப்பட்டது.
இப்பதிவிட்டபின் ஊரில் இருந்து வந்த உறவினர் DVD யில் இப்படி ஒரு காட்சி தேடினேன் கிடைக்கவில்லை. ஆனால் ஒரே மகள் ஆசையாகத் தான் திருமணம் செய்து வைத்தார்கள்.
தாய் கன்னத்தில் கன்னம் வைத்தார்..தந்தையார் கன்னத்தருகில் கன்னம் வைத்தார்.(என் சிறிய தந்தையார்)
இங்கு ஒரு சாமத்தியச் சடங்கில்.. வீடியோ எடுப்பவர்" அண்ணே பிள்ளையைக் கொஞ்சுங்கோ" எனத் தகப்பனிடம் கூற ..அவரோ "இது என்ன? புதுக் கூத்து" என்றார். தந்தை வயது 40 . கன்னத்தில் கன்னம் வைத்தார்..ஆனால் கட்டி அணைக்கவில்லை. இவருக்கும் ஒரே மகளே!
இன்னுமொரு சாமத்தியச் சடங்கு ..வீடியோ எடுப்பவர் தந்தையைக் கொஞ்சும் படி கூறிய போது காலில் விழுந்து வணங்கிய பிள்ளையைத் தோளில் தொட்டுத் தூக்கி கன்னத்தில் கன்னம் முட்டியும் முட்டாமலும் வைத்ததுடன், " இனி எல்லாம் சரி தானே" என்றார்.அதாவது அந்த அன்பிற்கும் "எல்லை" வந்து விட்டது.
இவர்களை நாகரீகம் தெரியாத "காட்டார்" எனக் கருதினால் யார்தான் என்ன ? செய்யமுடியும்.
சமீபத்தில் திரைக் கவிஞர் சினேகன் அவர்கள் நடத்திவைத்த ஒரு திருமண நிகழ்வில் வந்த அனைவரும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி, முத்தமிட்டதை
அதிர்ச்சியுடன் விமர்சித்து பத்திரிகைகள் எழுதியிருந்தன. அவர் அதற்கு விளக்கமும் எழுதியிருந்தார். பதிவும் இட்டு இருந்தார்கள்.
நான் நெறி;வரையறை;எல்லை என்பது பற்றிப் பேசுகிறேன்.
கலைஞர் இம்முறை பதவியேற்கும் போது எடுக்கப்பட்ட படத்தில் அவர் இரு மனைவிமார்களும் இருந்த போது...ஒரு பதிவர் அப்படம் 'தமிழகத்தின் அவமானம்' போல் படத்துடன் பதிவிட்டிருந்தார்.
அதைப் பார்த்து எதுவுமே கூறமுடியாத நிலையே என் நிலையும்...நான் கலைஞரை மதிக்கிறேன் ஆனால்
அவர் விமர்சனத்துக்கு அப்பாற்ப்பட்டவரல்ல என்பதையும் உணர்கிறேன்.
அதுபோல் கமலின் ஆளுமையில் மதிப்புண்டு. அதனால் அவர் விமர்சனத்துக்

அப்பாற்ப்பட்டவர் என்பதில் ஏற்பில்லை.
நான் 'கட்டவுட்டுக்கு' பால் ஊற்றும் வகையறா அல்ல. விசிலடிச்சான் குஞ்சுமல்ல!
காந்திக்கு....ஜி! கமலுக்கு...ஜி! பாவம்… காந்திஜி!!!!....
நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே எனக் கூறுவோம், நக்கீரர் பரம்பரை என மார்தட்டுவோம்... பின் குருக்கள் செய்தால் குற்றமில்லை என்று கும்பலில் கூப்பாடு போடுவதை கொள்கையாக்கி விட்டோம்...
தந்தை மகள் உறவு என்ற போதிலும் பொது இடத்தில் இவ்வளவு நெருக்கம் நெருடல் தான். தன் மகளாக இல்லாமல் இருந்து வேறொரு அதே வயது பெண் அங்கிருந்தால் அதையும் மகளைப் போல் தான் கமல் நினைத்து அணைத்து முத்தமிட்டார் என்று எவரும் அருவெறுப்பின்றி பார்ப்பார்களா ? அல்லது கமல் தான் அதே போன்று தன் வயது ஆடவரை தன் மகளுக்கு அந்த கோலத்தில் முத்தமிட அனுமதித்து தந்தை -மகள் என்ற உறவுக்கு புனிதம் கற்பிப்பாரா ?
அந்த படத்தைப் பார்க்கும் எல்லா மனிதர்களுமே முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் அப்பா - மகள் உறவு என்று தேற்றிக் கொள்கின்றனர்.
அந்த காலத்தில் வயது வந்த பெண்ணையும், அவள் தந்தையும் தனித்துவிட மாட்டார்கள், தவறுகளுக்கு மனம் கூசி தற்கொலை செய்து கொள்வதைவிட கொஞ்சம் கசப்பாக இருந்தாலும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்காமல் இருப்பதே அறிவான செயல். தனது மகள் இல்லை, தனது இரத்தம் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக அண்ணன் மகளைக் கெடுத்த காமுகர்களும் சமூகத்தில் உண்டு.
நான் நெருப்பென்றாலே உன் வாய் ஏற்கனவே வெந்து இருக்கிறது என்று சொல்லும் தாங்கள், சினிமா எல்லாமே நடிப்புதான், அதை கமல் சிறப்பாக செய்கிறார், வெறும் நடிப்புதானே என்று
நடிகையாகி இருக்கும் தன் மகளுடன் ஜோடியாக மற்ற நடிகைகளுடன் காட்டும் அதே நெருக்கத்துடன் கமல் நடித்தால், அதை இங்கே பின்னூட்டமிட்டு வதைத்தவர்கள் ஏற்றுக் கொள்வார்களா ? அதற்கும் 'ஆம், நடிப்புதானே பரவாயில்லை, தவறாக நினைக்கமாட்டோம்' என்று மனம் திறந்து சொன்னால் எனது பார்வை தவறு, நான் மோசமான மனநிலைக் கொண்டவன் என்று ஒப்புக் கொண்டு உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். கமல் அப்படி செய்தால் அதை மீண்டும் கண்டிக்கும் முதல் ஆள் நானாகவே இருக்கும்.
அதனால் ...தூங்குபவரை எழுப்பலாம்...தூங்குவதுபோல் நடிப்போரை... முடியுமா??

எனவே, இதுவரை வந்த வரப்போகும் அனைத்துப் பின்னூட்டத்திற்கும் இதுவே என் பதில்.

6 comments:

துளசி கோபால் said...

யோகன், எந்தப் பதிவைப் பற்றி இப்படி எழுதியிருக்கீங்க?
நான் அதை மிஸ் செஞ்சுட்டேன்போல இருக்கே....

சுட்டி உண்டா?

கோவி.கண்ணன் said...

சரியான கோணத்தில் விளக்கி எழுதி இருக்கிறீர்கள், பொதுவாக கருத்துக் கூறினால் அதை ஒரு கருத்தாக எடுத்துக் கொள்ளாமல் மனநிலையுடன் ஒப்பிட்டு பார்த்து தூற்றுவது பலரின் வழக்கமாகிவிட்டது.

என்னதான் குடும்ப உறுப்பினர்களாக ஒரே வீட்டில் இருந்தாலும் தேவையான அளவு ஆடையுடன் தானே வீட்டில் இருக்கிறோம்.

இங்கே கமல் என்ற நடிகனின் பிம்பத்தின் மீது உள்ள பற்றினால் உங்கள் மீது அவதூராக கருத்துக் கூறினார்கள் என்றே நினைக்கிறேன்.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

அந்த கமல் இடுகைக்கே இட்டிருக்க வேண்டிய பின்னூட்டம். அப்போதும்சரி இப்போது இந்த இடுகையில் கொட்டியிருப்பதற்கும்சரி நிறைய சொல்லலாம். ஆனால், பயனுள்ள இடங்கள் பல இணையத்தில் இருப்பதால், பின்னூட்டம் இட்டேதீரவேண்டும் என்றும் தோன்றுவதால், ஒரு பெண்ணாக, இந்தப் பின்னூட்டம்.


இவ்வளவு வக்கணையாக நீட்டி முழங்கிப்பேசுகிறீர்களே, சற்றேறக்குறைய ஒரு மாதத்திற்கு முதல் நீங்கள் எழுதிய இடுகையொன்றின் தலைப்பு இதோ:


//அம்மாடி....இந்தப் பொண்ணுக்கு இம்புட்டுப் பெரிசு......//

பேரப்பிள்ளைகண்ட வயதுக்காரர் வைக்கும் தலைப்பா இது? ஏன், இந்த வரியையே, //அம்மாடி....இந்தப் பொண்ணுக்கு இம்புட்டுப் பெரிசு......// என்று உங்களின் மகள்களிடமோ பேரப்பிள்ளைகளிடமோ போய் சொல்லிப்பாருங்களேன்.

அந்த வாரயிறுதியில், மலைநாடானிடம் பேசும்போது என்னால் இந்தத்தலைப்பையே சொல்லமுடியவில்லை. ஆனால், நான் எதைச்சொல்ல முயன்றுகொண்டுருக்கிறேன் என்பதையுணர்ந்த அந்தத் தகப்பனும் வேதனையுடன் என்னுடைய கருத்தைப்பிரதிபலித்தார். எதிர்பார்க்கவில்லையென்று கூறியவர், இந்த அற்புதவரிகளை எழுதிய உங்களுடன் பேசுவதாகவும் சொன்னார்.

//அம்மாடி....இந்தப் பொண்ணுக்கு இம்புட்டுப் பெரிசு......// இப்படி பேரப்பிள்ளைகளைப்பெற்றவர்களே பேசும்/எழ்தும் உலகம் இருக்கும்போது உலகத்தின் பண்பைக் கட்டிக்காப்பதும் பெண்களின் உடலில்தான், அவர்களின் உடையில்தான் தங்கிருக்கப்போகிறது.

முன்பு எப்போதோ எழுதிய இடுகை --

Eve Teasing - ஈவ் டீசீங் - பாலியல் வன்முறை
http://mathy.kandasamy.net/musings/archives/2006/03/07/333

எனக்கு சொல்லப்பட்ட, பிறது நான் என்னிலும் இளையவர்களுக்கு சொன்ன அறிவுரௌகளில் ஒனறு

//அம்மாடி....இந்தப் பொண்ணுக்கு இம்புட்டுப் பெரிசு......// இப்படிச்சொல்லக்கூசச்செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஓரளவு வயதானவர்கள். அவரவர் வீடுகளில் குணத்திலகங்களாக அறமேயுருவானவர்களாக இருப்பார்கள் என்பது.

I REST MY CASE!

saving this response just incase it gets 'lost'.

-மதி

இத்துப்போன ரீல் said...

நிஜமாகவே அந்தப்படம் மிகவும் வக்கிரமாகவே இருந்தது.நான் அதற்கு பின்னூட்டம் இடும் போது கூட கமல் இதைத் தவிர்த்து இருக்கவேண்டும் என மென்மையாகவே எழுதியிருந்தேன்
எந்த அப்பாவும் தான் பெற்ற வயதுக்கு வந்த மகளை இந்த நெருக்கத்தில் கொஞ்சமாட்டார்கள்.என்பது எல்லோருக்கும் தெரியும்.ஆனால் கமலுக்கு ஆதரவாக,இது எல்லாம் தவறே இல்லை.நாங்களும் இம்மாதிரிதான் கொஞ்சுவோம்.உனக்கு வக்கிர புத்தி.. என்றெல்லாம்.எழுதியதைப் பார்த்தால்.... கடவுளே நாம் எங்கே போகிறோம்...?

ஜோ/Joe said...

Rolling Stone, America's most popular music magazine was launched in India by Anandh Mahindra on Sunday at Mumbai. The highlight of the musical launch is Shruthi Kamal's musical performance! Her father and veteran filmmaker Kamal Hassan attended the show along with his family members Gowthami, Akshara Kamal and Mahalakshmi (daughter of Gowthami).

The celebrities, those who attended the event, have praised the young girl for her flawless musical performance at the end. Kamal, the proud father of Shruthi, kissed her as a token of his blessings and love.
************

இதுக்கு மேலே உளறி கொட்டினால் நீர் சொன்னதையே உமக்கு சொல்லுகிறேன்

தூங்குபவரை எழுப்பலாம்...தூங்குவதுபோல் நடிப்போரை... முடியுமா??

Anonymous said...

யோகன் ஜி & " JOHAN JI "!

"ஜி" என்றால் ஹிந்தியில் "மதிப்புக்குரிய" மரியாதைக்குரிய என்று பொருள்படும் சொல்.

அதனால் 'கமல்ஜி" என்று அழைப்பது ஒரு "மகத்தான" மஹா கலைஞனுக்கு பொருத்தமான ஒன்று.

நீங்கள் மனம் முழுவதும் "முன்கணிப்பு" prejudice உடன் அனைத்து விஷயங்களையும் அணுகுகிறீர்கள். மாற்றிக் கொள்ளுங்கள்.

நன்றி !!!