Sunday, March 30, 2008

எப்படி இருந்தோம்... இப்படி ஆக்கிப் போட்டீங்களே!!

மனித அறிவு வளர்ச்சியில் பல உயிர்கள் மாற்றத்தைக் கண்டுவருவது

நாம் நாளாந்தம் செய்தியாகக் கேட்கிறோம்.

இந்த Glo fish எனும் வியாபரக் குறியுடன் செல்லப் பிராணியாக வளர்க்கப்படும், இவ் ஒளிரும் மீன்கள் மரபில் மாற்றம் செய்யப்பட்ட ZEBRA FISH .

இவை கடும் சிவப்பு,பச்சை, ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது.


1999 ல், Dr. Zhiyuan GONG உடன் அவர் உதவியாளர்களும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் ஒருவகை jelly fish இருந்து கிடைத்த பச்சை ஒளிரும் புரட்டீனை, சாதாரண ZEBRA FISH GENOME ல் செலுத்திய போது அந்த மீன் ,ஓளிர்வதை அவதானித்து...


அதையே ஒரு வியாபார உத்தியாக்கி, செல்லப்பிராணியாக உலகம் பூராக விற்பனை செய்கிறார்கள். நிறையவே சம்பாதிக்கிறார்கள். சோடி 10 யூரோ விலை போகிறது...






Saturday, March 22, 2008

ஆடல் காண்பீரோ...அழகு மயிலாடல் காண்பீரோ!!.

பாம்புக்குப் படையும் நடுங்கும் ஆனாலும் அதைப் பிடித்து ஆடவைத்துவிடலாம். மயில் அப்படியல்ல...எம் நினைப்புக்கு ஆடுவதல்ல....அது நினைத்தே ஆடும்...

நான் மயில்களைப் பல தடவை கண்ட போதும், ஆடும் மயிலை ஒரு தடவை கதிர்காமத்தில் சில விநாடிகள் கண்டுள்ளேன்.
2004 ஈழம், இந்தியா சென்றபோது பல மயில்களைக் கண்டேன். ஆனால்
ஆடும் மயில் காணக் கிடைக்கவில்லை.
இப்படத்தில் நீலமயிலுடன்,வெள்ளை மயிலும் எப்படி அழகு நடம் புரிகிறது.
படத்திலாவது இந்த அரிய காட்சியைக் கண்டு மகிழ்வோம்.


Thursday, March 20, 2008

வேதனையற்ற மரணம் நிராகரிக்கப்பட்ட பெண் மரணம்


பிரான்சில், சாந்தல் செபிர் (Chantal Sebire)எனும் 52 வயது முன்னாள் பள்ளி ஆசிரியையும் 3 பிள்ளைகளுக்குத் தாயான பெண் பல வருட காலமாக மூக்குப் பகுதியில் அபூர்வ மாற்ற முடியாத புற்று நோயால் பாதிக்கப்பட்டதால் , தான் வேதனையற்ற மரணத்தைத்(euthanasia) தழுவ அனுமதி தரவேண்டுமென அரசைக் கேட்டிருந்தார்.

பிரான்சு அதிபர் நிக்கோலா சார்கோசிக்கும் எழுதியிருந்தார்.
சமீபத்தில் தொலைக்காட்சியில் தோன்றி.. நாளாக ஆக வேதனையுடன் பார்வை,நுகரும் தன்மை, மணம் என்பனவற்றையும் உணரும் தன்மையைத் தான் இழந்துவிட்டதாகவும், இதைவிட தன்னைத் தெருவில் காணும் குழந்தைகள் பயப்படுவதும், சமீபத்தில் ஒரு பெண் தன்னைக்கண்டு ஓடியதும் தனக்கு மிக வேதனை தருவதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் இவர் நீதிமன்றத்தையும் நாடியிருந்தார்.
இவர் கோரிக்கை டியோன் நீதிமன்றத்தால்நிராகரிக்கப்பட்ட நிலையில், இவர் சுவிஸ்,பெல்சியம்,ஒல்லாந்து போன்ற ஐரோப்பிய 'வேதனையற்ற மரணத்தை' தழுவ அனுமதியுள்ள நாடுகளில் ஒன்றில் சென்று தன் வாழ்வை முடிக்க எண்ணியிருந்துள்ளார்.
அத்துடன் எந்த வைத்தியத்தையும் நிராகரித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று அவர் இல்லத்தில் தனிமையில் மரணத்தைத் தழுவியுள்ளார்.
'வேதனையற்ற மரணம்' பிரான்சில் சட்டபூர்வமாக அனுமதியில்லை.
இதையொட்டிய சர்ச்சைகள்,விவாதங்கள் இப்போ முக்கிய இடம் வகுக்கிறது.என்ன??இருந்தென்ன ? நோயற்ற வாழ்வு போல் வருமா??
அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.
http://news.bbc.co.uk/2/hi/europe/7305970.stm

Monday, March 17, 2008

பிரான்சின் உலக மகா யுத்தக் கடைசி வீரர் மறைவு

உலக மகா யுத்தத்தில் பங்குபற்றிய பிரன்சு வீரர் திரு. லசார் பொன்ரிசெலி (Lazare PONTICELLI) அவர்கள், தன் 110 வது வயதில் 12 -03- 2008 அன்று காலமானார். அன்னார் இறுதி யாத்திரை பிரஞ்சு அதிபர் (17 -03 - ௨00௮ ) தலைமையில் இன்று அரச மரியாதையுடன் நடை பெற்றது.
07- 12- 1887 ல் ,இத்தாலியில் 7 பிள்ளைகளில் ஒருவராக பிறந்தவர். தந்தையில் மரணத்தின்பின் ,ஏற்கனவே பிரான்சில் உள்ள தன் சகோதரர்களிடம் தன் 9 வது வயதில் 1907 ல் வந்தார்.
ஆரம்பத்தில் புகைபோக்கி துப்பரவுப் பணி, செய்திப் பத்திரிகை விநியோகித்தல் போன்ற வேலைசெய்து
ஆகஸ்ட் 1914 ல், தன் 16 வயதில், 18 வயதெனப் பொய் சொல்லி பிரஞ்சு இராணுவத்தின் வெளிநாட்டுப் பிரிவில் இணைந்து கொண்டு1915ல் ,இராணுவம் இத்தாலி சென்ற போது, இத்தாலி இராணுவத்தில் இணைந்தார்.
பின் நீக்கப்பட்டு, மீண்டும் ,ஆஸ்திரியாவுக்கு எதிரான போரில் பிரஞ்சுப் படையில் இணைந்து, இயந்திரத் துப்பாக்கிப்இயக்குபவராக இருந்தபோது, எறிகணைத் தாக்குதலுக்கு உள்ளாகிக் படுகாயமுற்றவர்.


1920ல் தன் சகோதரர்களுடன் சேர்ந்து 'பொன்ரிசெலி சகோதரர்கள் என்னும் உலோக வேலை நிறுவனத்தை நிறுவி செல்வந்தரானார்.இந் நிறுவனம் இன்றும் பிரபலமாக இவர்கள் பெயர் குறிப்பிடும்படி உள்ளது.

இந் நிறுவனத்தை இவர் 1960 வரை தலைமை வகுத்து நடத்தினார்.பிரான்சின் தேசிய தின கொண்டாட்டங்களில் சென்ற வருடம் வரை பங்கேற்றவர்.அத்துடன் தன் மரணத்துக்கு அரச மரியாதை தேவையில்லை எனவும் தெரிவித்தவர்.

கடைசியாக முதலாம் உலக மகா யுத்தத்தில் மரணடைந்த அனைவரையும் கௌரவிப்பதானால் அதை ஏற்றுக்கொள்ளுவதாகக் கூறியுள்ளார்.

இவரே பிரான்சில் அதிக நாள் வாழ்ந்த ஆண் எனும் சிறப்பையும், இத்தாலியில் பிறந்து அதிக காலம்வாழ்ந்த ஆண் எனும் சிறப்பையும் பெற்றவராவார்.

உலக மகா யுத்தத்தில் பங்கேற்ற சாட்சிகளாக இன்னும் எண்மர் வாழ்வதாகக் செய்திகள் கூறுகிறது.

Saturday, March 08, 2008

ஏன்? இது...நாக்கை இப்பிடி ...தொங்கப் போடுது.

வலையில் மேயும் போது ,இதைக் கண்டேன். இயற்கையின் விசித்திரம்
வியப்பையும் ,சிரிப்பையும் தந்தது. மிளகாய்க்கே உறைக்கிறதோ?
உங்களுடன் பகிர்கிறேன்.






Wednesday, March 05, 2008

அம்மாடி....இந்தப் பொண்ணுக்கு இம்புட்டுப் பெரிசு....

கதைகளிலும்,கவிதைகளிலும்...வர்ணிப்பதைப் படித்துள்ளேன்.
இப்படியும் இருக்குமா??? மிகைப்படுத்துகிறார்கள் என எண்ணியிருந்தேன்.
வாழ்நாளில் இப்படி படத்தில் கூடப் பார்க்கவில்லை.
இதைப் பார்க்க மலைப்பாக இருந்தது. எப்படித்தான் இப்பெண் சமாளிக்கிறாரோ!!
நீங்களே, பாருங்கள்.
மயில் தோகை போல் என்பாங்க...நிசமாகவே..மயில் கூட பின்னுக்குத்தான்


என் தலையில் உள்ள ஒரு அங்குல நீளத்தை,அதுவும் களைபிடுங்கிய
வயல் போல் உள்ளதைப் பராமரிக்க ,நான் படும் பாடு.
இந்தப் பெண் இவ்வளவு நேர்த்தியாக பராமரிக்கிறார். பாராட்டுகிறேன்.
பார்த்தேன் ,மலைத்தேன்,பகிர்ந்தேன்