
பரபரப்பான காலை வேளை; போக்குவரத்துச் சந்தடி சத்தம்;
இரண்டு நண்பர்கள் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.
"ஏய்!...எங்கேயோ..பூனைக்குட்டி கத்துற சத்தம் கேட்குது பாரு"..என்று சுற்று முற்றும் பார்த்தான். ஒரு நண்பன்.
தூரத்தில் நடைபாதையோரத்தில் கல்லிடுக்கில் பூனைக்குட்டி ஒன்று சிக்கியிருந்தது.
நண்பன் சென்று அந்தக் கல்லை நிமிர்த்திப் பூனைக்குட்டியை விடுவித்தான்.
அடுத்த நண்பனுக்கோ ஆச்சரியம்!!
தெருவில் எத்தனை பேர் போய்க் கொண்டிருக்கிறோம். எங்களுக்கெல்லாம் பூனைக்குட்டியின் சத்தம் கேட்கவில்லை.
உனக்கு மட்டும் கேட்டிருக்கிறது. உன் காது ரொம்ப சக்தி வாய்ந்தது தான் என்றான்.
"விடயம் காதிலில்லை;மனிதர்கள் மனதில் இருக்கிறது.என்றான் பூனைக்குட்டியைத்
தூக்கிவிட்ட நண்பன்!
"எப்படிச் சொல்கிறாய்?"
"இப்போ பார்" என்று கூறித் தன் பையில் இருந்த சில்லறைக் காசுகளை;
நடை பாதையில் போட்டான்.
உடனே நடந்து கொண்டிருந்தவர்கள் அனைவரும் திரும்பிப் பார்த்தார்கள்.
"பார்த்தாயா இதுதான் மனித இயல்பு.காசு என்றதும் காது திறந்து கொள்கிறது" என்றான் நண்பன்.
**மன்னிக்கவும்!
இதை நான் கற்பனை செய்யவில்லை. காலை என் நண்பர் ஒருவர் சென்னையில் இருந்து;
மின்னஞ்சலில் எனக்கு அனுப்பினார்.நன்றாக இருந்ததால் உங்களுடன் பகிரலாமே எனப்
பதிவிட்டேன். அதைக் குறிப்பிடத் தவறி விட்டேன்.
பின்னூட்டத்தைப் பார்த்ததும்! அதைப் குறிப்பிட வேண்டிய அவசியம் உணர்ந்தேன்.
என்ன? இந்த ஆள் இப்படியெல்லாம் யோசிப்பதாவது? அப்படியேன நினைக்கிறீங்களா?
***படம் :நீர்கொழும்புக் கடற்கரை மாலைச் சூரியன்!