மனிதன் மனிதனிலோ ,மற்றைய உயிர்களிலோ காட்டும்
அன்பை மனிதாபிமானம் என்கிறோம்.
அந்த மனிதாபிமானம் உலகில் குறைந்து வருகிறதெனும் கூச்சலுக்குக் குறைவில்லை.
ஆனால் எதிர் மாறாக மிருகங்களுள் அபிமானமும், அன்பும்
ஓங்குதோ என ஐயம் ஏற்படவைக்கின்றன தொடர்ந்து வரும்
காட்சிகள்.
1- ஆகா...இந்த வாத்துக்குஞ்சு..எப்படி மீன்களுக்கு ஊட்டுதெனப் பாருங்கள்.
2- பூனை அணிலுக்கு எதிரி...இது தான் நாம் அறிந்தது.
இந்தத் தாய்ப் பூனையைப் பார்ப்போமா???
3- இந்த சிறுத்தை இக்குரங்குக் குட்டியின் தாயைக் கொன்ற
பின் செய்வதைப் பாருங்கள்.
4-நான், நீங்கள் கூட பூனை,காகத்தைக் கலைப்பதையே கண்டிருப்பீர்கள்.
இதைப் பாருங்கள்
ஜெகோவாவின் சாட்சிகள், பிரசாரத்துக்குத் தரும் புத்தகங்களில்
மானும் புலியும் அருகருகே நின்று நீரருந்தும் படங்கள் இருக்கும்.
இயற்கை நியதிக்கு விலக்காக இருக்கே!!! என ஆச்சரியப்படுவேன்.
ஆனால் நடந்துதான் விடுமோ???
இக் கலியுகத்தில்.