Thursday, December 13, 2007

பூ..பூவாய் பூத்திருக்கு..

இவை என் வீட்டு மாடத்தில் பூத்தவை....





15 comments:

துளசி கோபால் said...

அழகா இருக்கு யோகன்.

அந்த ஆர்க்கிட் ரொம்பப் பிடிச்சிருக்கு.

அதென்ன மாடம்..?

எப்படிப்பா எல்லாரும் வண்டுகளைப் பிடிச்சுப் பூவில் விடறீங்க?:-))))))

கானா பிரபா said...

அழகான படங்கள் அண்ணா, எங்கள் வீட்டுத் தோட்டம் இப்போது தான் ஆரம்பம், இன்னும் பூக்கள் வர நாள் இருக்கு.

சின்னக்குட்டி said...

நல்லாயிருக்கு

குமரன் (Kumaran) said...

ஆகா. படத்தில் பார்ப்பதற்கே இந்தப் பூக்கள் இவ்வளவு அழகாக குளிர்ச்சியாக இருக்கின்றதே. நேரில் பார்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

நன்றி யோகன் ஐயா.

செல்லி said...

யோகன்
எல்லாப் பூக்களு நல்ல வடிவு. அதெப்படி கடைசிப் பூவைத் தவிர மற்றப் பூக்களில் எல்லாம் வண்டு வந்தது?:-)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

துளசியக்கா!
பூ எப்போதும் இருக்கும்;அதில் வண்டு எப்போதாவதும் இருக்கும்...அந்த நேரம் தான் கருவியைத் தூக்கச் சொல்லும்.
இந்த ஆக்கிட் நிறம் எனக்கு மிகப்பிடித்தது; மீண்டும் பூக்க மறுக்கிறது; தங்களுக்கு ஏதாவது உரவகை
தெரியுமா?? மீண்டும் பூக்க வைக்க...
மாடம்- பல்கனி -balcony....இதை என் இளமைத் தமிழாசிரியர் "பலகணி" எனக் கூற (சீதை ,இராமரை பலகணியில் நின்று பார்த்தவராம்),அதை வேறு ஒரு பதிவில்
குறிப்பிட்டபோது, சக பதிவர் ஒருவர் மாடம் என்றார்.
தயவு செய்து; தமிழக ஈழ சகோதரர்கள்; ஒரு பொதுவான தமிழ்ச் சொல்லை தெரிவு செய்யுங்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!
உங்கள் வீட்டுத் தோட்டமென்றால்...அப்போ மரக்கறியும் இருக்குதென நினைக்கிறேன்.
சொந்த நிலமானால் இந்த டலியா,மார்கிரட் பூவை வையுங்கள் ;வருடாவருடம் பூத்தரும்.

பாச மலர் / Paasa Malar said...

பூக்கள் அருமை..அதுவும் அந்த ஆர்கிட்...

மாயா said...

அழகான படங்கள் யோகன்அண்ணா :)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

குமரா!!
உண்மை ;இந்த பூக்கள் கண்ணுக்கு குளுமையானவையே...கோடை வந்தால் கண்ணுக்குக் குளுமை கிடைக்கும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

செல்லி!
வண்டு வந்து அமரும்போது; நான் கருவியை எடுத்துக் காத்திருப்பேன். 3 வது ஆர்கிட் படத்தில்
மொட்டுக்கள்...வண்டு வரவில்லை.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சின்னக்குட்டியர்,மாயா!!
பிடித்திருந்தால் மகிழ்வே!!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பாச "மலர் "க்கு "பூ பிடிக்காமல் இருக்குமா???
இனப்பாசம் இருக்கத்தானே செய்யும்.
இந்த ஒக்கிட் எனக்கும் அதன் நிறத்துக்காகப் பிடித்தது.

குட்டிபிசாசு said...

அழகான மலர்கள்! படம் பிடித்த உங்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!!

நானானி said...

யோகன்!!
உங்கள் மாடத்துப் பூக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு!