![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfWWh2yItelka45uTmYb3LUeFyqvsh7V0hnfKfqZkXy8DsCRjUZodm1oiQSiQFDquncbYgHcrNXTN57MPhSXYGR_aGIxGY51FUpGs2sQjhTSVt7YNrZoDH3STHcdoYQvSXe1LMdA/s320/h_9_ill_1022142_ponticelli.jpg)
07- 12- 1887 ல் ,இத்தாலியில் 7 பிள்ளைகளில் ஒருவராக பிறந்தவர். தந்தையில் மரணத்தின்பின் ,ஏற்கனவே பிரான்சில் உள்ள தன் சகோதரர்களிடம் தன் 9 வது வயதில் 1907 ல் வந்தார்.
ஆரம்பத்தில் புகைபோக்கி துப்பரவுப் பணி, செய்திப் பத்திரிகை விநியோகித்தல் போன்ற வேலைசெய்து
ஆகஸ்ட் 1914 ல், தன் 16 வயதில், 18 வயதெனப் பொய் சொல்லி பிரஞ்சு இராணுவத்தின் வெளிநாட்டுப் பிரிவில் இணைந்து கொண்டு1915ல் ,இராணுவம் இத்தாலி சென்ற போது, இத்தாலி இராணுவத்தில் இணைந்தார்.
பின் நீக்கப்பட்டு, மீண்டும் ,ஆஸ்திரியாவுக்கு எதிரான போரில் பிரஞ்சுப் படையில் இணைந்து, இயந்திரத் துப்பாக்கிப்இயக்குபவராக இருந்தபோது, எறிகணைத் தாக்குதலுக்கு உள்ளாகிக் படுகாயமுற்றவர்.
1920ல் தன் சகோதரர்களுடன் சேர்ந்து 'பொன்ரிசெலி சகோதரர்கள் என்னும் உலோக வேலை நிறுவனத்தை நிறுவி செல்வந்தரானார்.இந் நிறுவனம் இன்றும் பிரபலமாக இவர்கள் பெயர் குறிப்பிடும்படி உள்ளது.
இந் நிறுவனத்தை இவர் 1960 வரை தலைமை வகுத்து நடத்தினார்.பிரான்சின் தேசிய தின கொண்டாட்டங்களில் சென்ற வருடம் வரை பங்கேற்றவர்.அத்துடன் தன் மரணத்துக்கு அரச மரியாதை தேவையில்லை எனவும் தெரிவித்தவர்.
கடைசியாக முதலாம் உலக மகா யுத்தத்தில் மரணடைந்த அனைவரையும் கௌரவிப்பதானால் அதை ஏற்றுக்கொள்ளுவதாகக் கூறியுள்ளார்.
இவரே பிரான்சில் அதிக நாள் வாழ்ந்த ஆண் எனும் சிறப்பையும், இத்தாலியில் பிறந்து அதிக காலம்வாழ்ந்த ஆண் எனும் சிறப்பையும் பெற்றவராவார்.
உலக மகா யுத்தத்தில் பங்கேற்ற சாட்சிகளாக இன்னும் எண்மர் வாழ்வதாகக் செய்திகள் கூறுகிறது.
2 comments:
யோகன்,
பிரான்சு எப்போதும் அதன் போர் வீரர்களை சிறப்பாகவே கவுரவித்து வருகிறது, அதைப்போன்றே இவரையும் நன்கு கவுரவிக்கிறது, இதை இந்தியா போன்ற நாடுகளும் பின்பற்றலாம்.
பிரெஞ் ஓபன் டென்னிஸ் போட்டி நடைப்பெறும் மைதானத்திற்கு கூட இப்படி உலகப்போரில் பங்குப்பெற்று சாதனைப்புரிந்தவரின் பெயரே இடப்பெற்றுள்ளது.
ரோலாண்ட் காரோஸ் என்பவர் பிரென்ஞ்ச் விமானப்படை விமானியாக இருந்து பல விமானங்களை சுட்டு வீழ்த்திய வீரர் ஆவார், அவர் போரிலே இறந்து விட்டார் என நினைக்கிறேன்.
வவ்வால்!
விடுதலையின் அருமை புரிந்ததால்; பெற்றுத்தந்த வீரர்களைப் போற்றுகிறார்கள் போலும்.
நமது நாடுகளில்; அரசியல் அக்கப்போரில் இவர்கள் மறக்கடிக்கப்படுவார்கள்.
சினிமா நடிகைகளுக்கு வேண்டுமானால் கோவில் கட்டுவார்கள். எந்தனை முன்னாள் இராணுவ வீரன் அரசியலில் உள்ளான்; ஆனால் 2 படத்தில் கதாநாயகனாக வேசம் கட்டினால்;முதலமைச்சர்;அதே ஆள் 5 படமானால் பிரதமமந்திரியாகும் கனவுடன் இருக்கிறார்கள்.
இவர்களையே தானே தூக்கிப்பிடிக்கிறார்கள்.
ஆம் ;ரொலண்ட் கரோ(Roland Garros) பற்றிய தங்கள் தகவல்கள் உண்மையே.
Post a Comment